செய்திகள் :

தில்லி தனியார் வங்கியில் தீ விபத்து!

post image

தில்லியின் தர்யாகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோல்சா சினிமாவுக்கு எதிரே உள்ள ஆக்சிஸ் வங்கியில் இன்று காலை 9:25 மணிக்கு இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காலை 10:10 மணிக்கு தீ முழுவதும் அணைக்கப்பட்டது, வங்கியின் உள்ள ஏர்-கண்டிஷனர், மரச்சாமன்கள் மற்றும் ஆவணங்களில் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கியில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்து குறித்த காரணங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திரிபுராவில் 100 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது

திரிபுராவில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். திரிபுரா மாநிலத்தில் ரகசிய தகவல் வந்ததையடுத்து பிஎஸ்எஃப் மற்றும் சுங்கத் துறை இணைந்து கூட்டுக் குழு அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க

குஜராத் பேரவையில் மோதல்: பாலியல் வழக்கில் பாஜக எம்எல்ஏவை கைது செய்ய காங்கிரஸ் கோரிக்கை

குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீதான பாலியல் வழக்கில் அவரை கைது செய்யுமாறு, அம்மாநில அரசுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.குஜராத் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்த... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் ஆடியோவில் முத்தலாக்.. கணவர் மீது மனைவி புகார்!

கேரளத்தில், வரதட்சிணைக் கொடுமை செய்து வாட்ஸ் ஆப்பில் மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கல்லுராவியைச் சேர்ந்த 21 வயது பெண்ணை அவரது கணவர் அப்துல் ரசாக் வாட்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு: 8 ஆக உயர்ந்த பலி!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்... மேலும் பார்க்க

யூனியன் தலைவர் பதவிக்கு ரூ. 30 லட்சம்! ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வால் ஒருவர் தற்கொலை முயற்சி?

சண்டிகரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பணமோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.சண்டிகரின் சங்க்ரூர் தொகுதி எம்எல்ஏ-வான ஆம் ஆத்மியைச் சேர்ந்த நரேந்தர் கௌர் பராஜ், தன்னை பவானிகர் பகுதி லாரி ... மேலும் பார்க்க

ஆந்திராவில் போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் அபராதம், சிறை!

ஹைதராபாத்: இன்று முதல் ஆந்திர அரசு போக்குவரத்து விதிகளை கடுமையாக்கியுள்ளது. விருப்பப்படி விதிகளை மீறியதற்காக வாகன ஓட்டிகளை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க