செய்திகள் :

கோடையில் மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் தடுக்கும் வழிமுறைகள்!

post image

கோடைக்காலம் தொடங்கிவிட்டால் ஒருபக்கம் மின் விசிறிகளும், ஏசிகளும், குளிர்பதனப் பெட்டிகளும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்.

இதனால், நாம் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம். ஆனால், மின் கட்டணத்திலிருந்து தப்பிக்க முடியாது.

எனவே, மின்சாதனங்களை கவனமாக பயன்படுத்தினால், மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் தவிர்க்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

பொதுவாக ஏற்கனவே ஏசி வைத்திருப்பவர்கள் எப்போதும் 24 - 26 டிகிரி செல்சியஸ் என்ற குளிர்நிலையிலேயே பயன்படுத்துவது நல்லது.

ஏசியை ஒரு அறையின் எந்தப் பகுதியில் வைத்திருக்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். திறந்த அலமாரிகள் அதிகம் இருக்கும் அறையில் ஏசி இயங்குவதால் அதிக மின்சார செலவு ஏற்படலாம்.

புதிதாக ஏசி வாங்குவோர், இன்வெர்ட்டர் கொண்ட ஏசிகளை வாங்குவது நல்லது. அது தேவைக்கேற்ப கம்ப்ரசரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது.

மின் விசிறி பற்றி சொல்லவே வேண்டாம். அறையில் இருக்கும்போது மறக்காமல் சுவிட்ச் ஆன் செய்வதைப்போல, அறையை விட்டு வெளியே போகும்போது மறக்காமல் சுவிட்ச் ஆஃப் செய்யுங்கள். மின் விசிறிகளை சுத்தமாகப் பராமரிப்பது நல்ல காற்றோட்டத்தைக் கொடுக்கும்.

எந்த மின்னணு சாதனங்களையும் இயக்கிய பிறகு மறக்காமல் சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள்.

குளிர்பதனப் பெட்டியை சுத்தமாக வைத்திருப்பதும், அடிக்கடி திறக்காமல், தேவைப்படும் பொருள்களை ஒரே நேரத்தில் எடுத்து, ஒரே நேரத்தில் வைப்பதும், குளிர்பதனப் பெட்டி முழுக்க பொருள்கள் இருக்குமாறு வைத்துக் கொள்வதும் நல்லது.

வாஷிங் மெஷினில் கொஞ்சம் துணி இருக்கிறது என்று போட்டுவிடாமல், அதன் கொள்ளளவு நிரம்பும் வகையில் துணியைப் போடுவதால், மின்சாரத்தை சேமிக்கலாம்.

டிவியை தற்போது வைஃபையுடன் இணைத்துவிட்டால், சிலர் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது தொலைபேசி அழைப்பு வந்தால், டிவியை ஸ்டாப் செய்து பேசிக் கொண்டிருப்போம். பிறகு வேறு வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். அவ்வாறு சென்றாலும் டிவிதான் ஸ்டாப் ஆகியிருக்குமே தவிர மின்சாரம் அல்ல என்பதை மனதில் வைத்து டிவியை ஆஃப் செய்யவும்.

உங்கள் வீட்டில் ஒவ்வொரு பொருள்களையும் இயக்கிப் பார்த்து எப்போது மின் மீட்டர் அதிகம் ஓடுகிறது என்பதை கவனித்து அந்தப் பொருளில் இருக்கும் பிரச்னைகளை சரி செய்யலாம்.

உலக செஸ் தரவரிசை: 3-ம் இடத்துக்கு முன்னேறிய குகேஷ்!

உலக செஸ் தரவரிசையில் தமிழக வீரர் குகேஷ் முதல்முறையாக மூன்றாம் இடத்துக்கு முன்னேறினார். பிரக்யானந்தா 8-வது இடத்தில் உள்ளார். உலக செஸ் தரவரிசைப் பட்டியலை ஃபிடே அமைப்பு இன்று வெளியிட்டது. கிளாசிக் போட்டி... மேலும் பார்க்க

துல்கர் சல்மான் 40 - டைட்டில் வெளியீடு!

நடிகர் துல்கர் சல்மான் புதிய படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.நடிகர் துல்கர் சல்மானின் 40 ஆவது படம் குறித்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை 5 மணியளவ... மேலும் பார்க்க

வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது? வெற்றி மாறன் பதில்!

வாடிவாசல் படப்பிடிப்பு குறித்து வெற்றி மாறன் பேசியுள்ளார்.'கங்குவா' படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆன... மேலும் பார்க்க

ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த அஜித் ரசிகர்கள்!

குட் பேட் அக்லி டீசருக்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் ரசிகர்கள் தங்க மோதிரத்தைப் பரிசளித்துள்ளனர்.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி ... மேலும் பார்க்க

மார்ச் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் மார்ச் மாதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)கிரகநிலை:தன வாக்க... மேலும் பார்க்க

2 கோடி பார்வைகளைக் கடந்த குட் பேட் அக்லி டீசர்!

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று... மேலும் பார்க்க