செய்திகள் :

யூனியன் தலைவர் பதவிக்கு ரூ. 30 லட்சம்! ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வால் ஒருவர் தற்கொலை முயற்சி?

post image

சண்டிகரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பணமோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சண்டிகரின் சங்க்ரூர் தொகுதி எம்எல்ஏ-வான ஆம் ஆத்மியைச் சேர்ந்த நரேந்தர் கௌர் பராஜ், தன்னை பவானிகர் பகுதி லாரி தொழிற்சங்கத்தின் யூனியன் தலைவராக நியமிப்பதாகக் கூறி, ரூ. 30 லட்சம் பெற்றதாக மன்ஜித் சிங் காகா என்பவர் குற்றம் சாட்டினார்.

ஆனால், தன்னை நரேந்தர் ஏமாற்றி விட்டதாகக் கூறி, லாரி தொழிற்சங்க அலுவலகத்தின் முன்பாக விஷம் அருந்தி, மன்ஜித் தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும், அவரை மீட்ட அப்பகுதியினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில், நரேந்தர் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.

இதையும் படிக்க:மார்ச் 4 முதல் புதிய வரி விதிப்பு அமல்: டிரம்ப்பால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு?

இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டை அப்பட்டமான பொய் என்று நரேந்தர் தொடர்ந்து மறுத்து வருகிறார். அவர் மேலும் கூறியதாவது, ``பவானிகர் லாரி தொழிற்சங்க யூனியன் தலைவர் தேர்தலுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தேர்தல், தொழிற்சங்க உறுப்பினர்களால் சுயாதீனமாக நடத்தப்பட்டது; இது ஒரு அரசு சாரா அமைப்பாகும்.

இந்தத் தேர்தலுடன் என்னை இணைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை; அரசியல் நோக்கம் கொண்டவை. அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள்தான், ஆம் ஆத்மியின் பிம்பத்தை கெடுக்க முயற்சிக்கின்றன.

இந்த வழக்கில், காவல்துறையினர விரிவான விசாரணை நடத்த வேண்டும். ரூ. 30 லட்சம் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். பணத்தை கொடுத்தவர்கள் மற்றும் ஏற்றுக்கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 50 பேர் மீட்பு: 4 பேர் பலி!

உத்தரகண்ட் பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலியானதாக இந்திய - திபெத் எல்லை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 பேர் காய... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் கைத்தவறி அழைப்பு செல்வதைத் தடுக்கும் வசதி

செல்போனில் அரட்டை அடிக்க, பேச என பல வசதிகள் ஏற்படுத்திக்கொண்டே செல்லும் செயலிகளில் முதலிடம் வாட்ஸ்ஆப்-க்குத்தான்.வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் சந்திக்கும் சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்... மேலும் பார்க்க

இந்தியா: மொபைல் போன் ஏற்றுமதி 40% அதிகரிக்க வாய்ப்பு

இந்தியாவில் மொபைல் போன்களின் ஏற்றுமதி அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகளவில் அதிக மக்கள்தொகையில் முதலிடம் கொண்டுள்ள இந்தியாவில் மொபைல் போன்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அத... மேலும் பார்க்க

இலங்கை முன்னாள் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை தலைநகர் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் மோடி சந்தித்தார்.இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, "என்எக்ஸ... மேலும் பார்க்க

ஹிமாசலில் கனமழை, பனிப்பொழிவு: 538 சாலைகள் மூடல்!

ஹிமாசல் பிரதேசத்தில் மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 538 சாலைகள் மூடப்பட்டதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ஹிமாசல் பிரதேசத்தில் மழை, பனிப்பொழிவு காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

மணிப்பூரில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும்: அமித் ஷா!

மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2023 மே முதல் இன கலவரத்தால் பாதிக... மேலும் பார்க்க