செய்திகள் :

மழை, வெள்ள பாதிப்பு: ஹிமாசலுக்கு ரூ.1,500 கோடி!

post image

தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாசலப் பிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 9) அறிவித்துள்ளார்.

ஹிமாசலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தவாறு பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரில் கலந்துரையாடினார். மேலும், பாதிப்பு நிலவரம் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில், பெரிதும் பாதிக்கப்பட்ட ஹிமாசலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.

முதலில் ஹிமாசலப் பிரதேசத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார். பின்னர் ஹிமாசலின் காங்ரா பகுதியில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் மதிப்பீடு செய்யப்பட்டன.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஹிமாசலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகள் பல்வேறு வழிகளில் மதிப்பிடப்பட்டுள்ளன. வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக பி.எம். ஆவாஸ் யோஜனா திட்டத்தின் ஒதுக்க வேண்டிய நிதி, நெடுஞ்சாலைகள் மறுசீரமைப்பு, கல்வி நிலையங்கள் சீரமைப்பு, பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அத்தியாவசிய பொருள்களுக்கான நிவாரணம் போன்றவை இதில் மதிப்பிடப்பட்டன.

வெள்ளத்தால் பயிர்கள் மூழ்கி மற்றும் மின்சாரமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கூடுதல் உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்தார். பேரிடர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துக்கொண்டார். இத்தகைய இக்கட்டான சூழலில் மாநில அரசுடன் உறுதுணையாக மத்திய அரசு நிற்கும் எனத் தெரிவித்தார்.

வெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார். பேரிடர் பாதிப்புகளில் இருந்து மீளும் வகையில் மாநிலத்திற்கு ரூ. 1500 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தார்.

மேலும், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் விரைந்து செயல்பட்டு மக்களுக்கு உதவிய தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இதையும் படிக்க | ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

PM Modi announces financial assistance of Rs 1500 cr for flood and rain-affected areas in Himachal Pradesh

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காங்கேர் மாவட்டத்தில், கெடாபெடா வனப் பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் ... மேலும் பார்க்க

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

புதுதில்லி: பிகாரில் உள்ள பக்ஸர்-பாகல்பூர் அதிவேக வழித்தடத்தில் மொகாமா-முங்கர் 4 வழிச்சாலை பிரிவை ரூ.4,447.38 கோடி செலவில் கட்டுவதற்கு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெடித்த கலவரத்துக்கு மத்தியில் சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் போராட்... மேலும் பார்க்க

அயோத்தி கோயில் குறித்து பெருமையடையாதவர் இந்தியரா? யோகி ஆதித்யநாத்!

அயோத்தி ராமர் கோயில் குறித்து ஒருவர் பெருமையடையவில்லை என்றால், அவர் இந்தியர் என்பதே சந்தேகம்தான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். கோராக்நாத் கோயில் வளாகத்தில், இன்று (செப்.10) ... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்? அக்டோபரில் தொடக்கம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்டோபர் மாதத்தின் எந்த நாளிலும் பணிகளைத் தொடங்க தயாராக இருக்குமாறு இந்திய த... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானியர் வெளியேற்றம்!

ஹைதராபாத்தில் இருந்து, சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரது தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது உஸ்மான் (எ) முஹம்மது அப்பாஸ் இக்ர... மேலும் பார்க்க