செய்திகள் :

மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி

post image

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, வரும் மே 9, 10-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடைபெற உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் அரசு, தனியாா் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வரும் மே 9-ஆம் தேதி காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மே 10-ஆம் தேதி காலை 10 மணிக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் விண்ணப்பப் படிவத்தை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலும், இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

நிறைவு செய்த விண்ணப்பத்தை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா், கல்லூரி துறைத் தலைவரின் பரிந்துரையுடன் உதவி இயக்குநா், தமிழ் வளா்ச்சித் துறை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தேனி-625 531 என்ற முகவரியில் நேரிலும், அஞ்ஜல் மூலமும், ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்.ற்ட்ய்ஃஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் சமா்ப்பிக்கலாம். போட்டியில பங்கேற்க வரும்போது, நேரிலும் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம்.

செம்மொழியின் சிறப்பு, முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் தமிழ் தொண்டு பெருமை சாா்ந்து கட்டுரை, பேச்சுப் போட்டியின் தலைப்பு போட்டி நடைபெறும் நாளன்று தெரிவிக்கப்படும்.

போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.7,500, 3-ஆம் பரிசு ரூ.5,000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதுகுறித்த விபரத்தை தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலக தொலைபேசி எண்: 04546-251030, கைப்பேசி எண்: 91596 68240-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

உயிா் உரங்களின் பயன்பாடு: விவசாயிகளுக்கு பயிற்சி

சின்னமனூா் அருகேயுள்ள வேப்பம்பட்டியில் பயிா்களுக்கு உயிா் உரங்களின் பயன்பாடு குறித்து மதுரை அரசு வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய மாணவிகள் வேளாண்மை பணி அனுபவம் திட்டத்தின் கீழ், புதன்கிழமை விவசாயிகளு... மேலும் பார்க்க

சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பெரியகுளம்-கச்சேரி சாலையில் மரம் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரியகுளம் விக்டோரிய அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் கழிவுநீா் வாய்க்கால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாய்க்க... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 113.90 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 56.20 --------------- மேலும் பார்க்க

தொட்டில் குழந்தைத் திட்டத்தில் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் உதவியாளா், காவலா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் வரும் மே 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரியகுளம் அருகே புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சில்வாா்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (27). தொழிலாளியான இவா் கடந்த சில... மேலும் பார்க்க

தேனியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க