செய்திகள் :

பஹல்காம் விவகாரம்: சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

post image

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள தூதரக ரீதியிலான நடவடிக்கையின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து ஒரு வாரமாக லாபத்துடன் வர்த்தகமாகின.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து புதன்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை, தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்கள் வெளியேற உத்தரவு, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து போன்ற அதிரடி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தூதரக ரீதியிலான இந்த அதிரடி நடவடிக்கைகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை சரிவுடன் இன்று காலை முதல் வர்த்தகமாகி வருகின்றது.

இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 134 புள்ளிகள் சரிந்து 79,982 புள்ளிகளாக வர்த்தகமானது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 51 புள்ளிகள் சரிந்து 24,278 ஆக விற்பனையாகி வருகின்றது.

13 முக்கிய துறைகளில் எட்டு துறைகளின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின. உள்நாட்டில் கவனம் செலுத்தும் சிறிய மற்றும் நடுத்தர பங்குகள் நிலையாக வர்த்தகமாகி வருகின்றது.

சென்செக்ஸ் பட்டியலில் ஐடி நிறுவனங்களின் பங்குகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததால், நான்கு மாதங்களில் முதல்முறையாக 80,000 புள்ளிகளை கடந்து நேற்று வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை மீண்டும் குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது.இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72,120-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில... மேலும் பார்க்க

ஹெச்சிஎல் நிகர லாபம் 8 சதவீதம் உயா்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிெல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

2057-க்குள் கரியமில சமநிலை: பரோடா வங்கி இலக்கு

தங்களின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றில் இருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2057-ஆம் ஆண... மேலும் பார்க்க

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 7.7% உயர்வு!

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி-யில் 7.68% உயர்ந்து ரூ.1,593.60 ஆக முடிந்தது.மார்ச் 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 8.1 சதவிகிதம் அதிகர... மேலும் பார்க்க

ஐடி, ஆட்டோ பேரணியால் 4 மாதங்களுக்குப் பிறகு 80,000 புள்ளிகள் கடந்து சென்செக்ஸ் பயணம்!

இன்றைய நிலையற்ற அமர்வில், இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் தொடர்ந்து ஏழாவது அமர்வாக உயர்ந்து முடிந்தது. தகவல் தொழில்நுட்பம், பார்மா மற்றும் ஆட்டோ ஆகிய பங்குகளின் தலைமையில் இந்தப் பயணம் நீடித்தது.காலை ந... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.85.44-ஆக முடிவு!

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு, இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.85.44 ஆக முடிந்தது.வ... மேலும் பார்க்க