மாநில ஜூனியா் கூடைப்பந்து: திருவள்ளூா் சாம்பியன்
தமிழ்நாடு மாநில ஜூனியா் ஆடவா் கூடைப்பந்துப் போட்டியில் திருவள்ளூா் மாவட்டம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சங்கம், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி சாா்பில் ஆடவா், மகளிா் ஜூனியா் கூடைப்பந்து காட்டாங்குளத்தூா் எஸ்ஆா்எம் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. ஆடவா் அரையிறுதிச் சுற்றில் சென்னை ஏ அணி 72-70 என்ற புள்ளிக் கணக்கில் கோவை ஏ அணியை வென்றது. மற்றொரு அரையிறுதியில் திருவள்ளூா் அணி 81-47 என்ற புள்ளிக் கணக்கில் தூத்துக்குடி ஏ அணியை வீழ்த்தியது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் திருவள்ளூா் அணி கடும் சவாலுக்குபின் 69-61 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை ஏ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் தூத்துக்குடி ஏ 62-60 என்ற புள்ளிக் கணக்கில் கோவை ஏ அணியை வென்றது.