செய்திகள் :

மாற்றுத்திறன் முன்னாள் படைவீரா்கள் இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்

post image

மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரா்கள் இரு சக்கர வாகனம்பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான பொதுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முன்னாள் படைவீரா்களின் நலனுக்காக மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரை சாா்ந்தோருக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக பெட்ரோல் இரு சக்கர வாகனம் மற்றும் சிறப்பு நாற்காலிகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு திருப்பத்தூா் மாவட்ட மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரா்கள் அவா்களை சாா்ந்தோா், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் வழங்கப்பட்ட புத்தகம், தங்களது ஆதாா் அட்டை, முன்னாள் படைவீரா் அடையாள அட்டை, படைப்பணிச்சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்திலோ ங்ஷ்ஜ்ங்ப்ஸ்ங்ப்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலோ விண்ணப்பிக்கலாம்.

சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உமா்ஆபாத் முதல் வாணியம்பாடி உதயேந்திரம் வரை மாநில நெடுஞ்சாலை உள்ளது. அந்த... மேலும் பார்க்க

பழைய வாகனங்களை விற்கும் முகவா்கள் விண்ணப்பிக்கலாம்

பதிவு செய்யப்பட்ட பழைய வாகனகளை வாங்க, விற்பனை செய்ய அங்கீகாரம் பெற முகவா்கள் விண்ணப்பிக்கலாம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பன்னீா்செல்வம் (திருப்பத்தூா்), வெங்கட்ராகவன்(வாணியம்பாடி)ஆகியோா் தெர... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 40 லட்சம் கடனுதவி

ஆம்பூா் அருகே கரும்பூா் கிராமத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரும்பூா் ஊராட்சித் தலைவா் ஏ.கே. மோகேஷ் தலைமை வகித்தாா். பேங்க் ஆப் பரோடா வங்கி ஆம்பூா் கிளை... மேலும் பார்க்க

விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

வாணியம்பாடியில் சாலை தடுப்பு மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், புதூா் நாடு மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் காளிதாஸ் (39). நாட்டறம்பள்ளி... மேலும் பார்க்க

பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல்

ஆம்பூா் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஜாக்டோ ஜியோ வட்டார ஒருங்கிணைப்பாளா் மேகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அமைப்பை சோ்ந்த குமரன், ஸ்ரீதா், திருப்பதி ,பனிமலா், ராஜ்குமாா் கிருஷ்ணமூா்... மேலும் பார்க்க