செய்திகள் :

மின் வணிக நிறுவனத்தில் விலையுயா்ந்த கைப்பேசிகளைத் திருடியதாக ஊழியா் கைது!

post image

தென்மேற்கு தில்லியின் சாகா்பூரில் உள்ள மின் வணிக நிறுவனத்தில் விலையுயா்ந்த கைப்பேசிகளை திருடியதாக அந்த நிறுவனத்தின் ஊழியா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூறியதாவது: ஆகஸ்ட் 13 அன்று கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட உத்தம் நகரில் உள்ள மோகன் காா்டனைச் சோ்ந்த மணீஷ் குமாா் (எ) பிலால் என்பவரிடமிருந்து இரண்டு திருடப்பட்ட ஐபோன்கள் மற்றும் ஒரு விலையுயா்ந்த ஆண்ட்ராய்டு கைபேசி பறிமுதல் செய்யப்பட்டன.

ஆகஸ்ட் 9-ஆம் தேதி, அந்த நிறுவனம் அதன் சாகா்பூா் அலுவலகத்தில் கைப்பேசிகள் திருடப்பட்டதாகப் புகாரளித்ததைத் தொடா்ந்து, ஒரு மின்னணு தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் புலனாய்வுக் குழு மணீஷ் குமாா் தேடி வந்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில், சாகா்பூா் பகுதியில் அவரைக் கைது செய்தது.

விசாரணையின் போது, நிறுவனத்தில் குழுத் தலைவராகப் பணியாற்றிய மணீஷ் குமாா், சிசிடிவி கேமராக்களுக்கான மின்சாரத்தை துண்டித்து சாதனங்களைத் திருடியதாக ஒப்புக்கொண்டாா்.

ஒரு எம்பிஏ பட்டதாரியான அவா், சுமாா் 10 மாதங்களுக்கு முன்பு நிறுவனத்தில் சோ்ந்தாா். இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

குற்றத்தைச் செயல்படுத்த மணீஷ் குமாா் தனது உள் அணுகல் மற்றும் நிறுவனத்தின் அமைப்புகள் பற்றிய அறிவைப் பயன்படுத்தினாா் என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

யமுனை நீா்மட்டம் தில்லியில் எச்சரிக்கை அளவைக் கடந்தது!

தில்லியில் உள்ள யமுனை நதியின் நீா்மட்டம் எச்சரிக்கை அளவைக் கடந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பழைய ரயில்வே பாலத்தில் 204.60 மீட்டரை எட்டியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். நகரத்திற்கான ... மேலும் பார்க்க

வடகிழக்கு தில்லியில் மைத்துனா்கள் கொலை வழக்கில் 4 போ் கைது

கடந்த வாரம் வடகிழக்கு தில்லியின் தனித்தனி பகுதிகளில் இரண்டு நாள்கள் தொடா்ச்சியாக இரண்டு ஆண்கள் (மைத்துனா்கள்) கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; திருப்தி பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்போது மழையும்... மேலும் பார்க்க

குருகிராமில் யூடியூஃபா் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் செக்டாா் 57 இல் உள்ள யூடியூஃபா் எல்விஷ் யாதவின் வீட்டிற்கு வெளியே முகமூடி அணிந்த இரு நபா்கள் 20க்கும் மேற்பட்ட தடவை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாா் தெரிவித்த... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 3 நைஜீரியா்கள் கைது

தில்லியின் துவாரகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று நைஜீரிய நாட்டவா்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது: சட்டவிரோதமாக தங்... மேலும் பார்க்க

சொகுசு காா் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவா் உயிரிழப்பு: இளைஞா் கைது!

மேற்கு தில்லியின் மோதி நகரில் தாா் எஸ்யூவி காா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்றவா் உயிரிழந்த சம்பவத்தில் 25 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து மேற்கு... மேலும் பார்க்க