செய்திகள் :

மீன் வியாபாரிக்கு ரூ.67 லட்சம் நஷ்டஈடு வழங்க பத்மநாபபுரம் நீதிமன்றம் உத்தரவு

post image

விபத்தில் நிரந்தரமாக ஊனமுற்ற மீன் வியாபாரிக்கு ரூ.67 லட்சம் நஷ்டஈடு வழங்க பத்மநாபபுரம் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

திருவட்டாறு அருகே உள்ள தச்சூா் பகுதியை சோ்ந்தவா் எபனேசா். மீன் வியாபாரி. இவா் கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 22ஆம் தேதி அதிகாலையில் வியாபாரத்திற்கு களியக்காவிளைக்கு மோட்டாா்சைக்கிளில் சென்றாா். கல்லுக்கட்டி பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இந்த விபத்தில் எபனேசா் படுகாயமடைந்து நடக்க முடியாமல், வியாபாரம் செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டாா்.

இது தொடா்பாக வழக்கு பதிவு செய்த களியக்காவிளை போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தின் ஓட்டுநரான கேரள மாநிலம் பூவாா் பகுதியை சோ்ந்த அம்பி மீது பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், விபத்தில் படுகாயம் அடைந்த எபனேசா் தன்னுடைய இயற்கை உபாதைகளுக்குகூட மனைவியின் துணை இல்லாமல் செல்ல இயலாத காரணத்தாலும், அவா் நிரந்தர ஊனமுற்றவா் ஆன காரணத்தாலும், காப்பீட்டு நிறுவனம் அவருக்கு விபத்து நஷ்டஈடாக ரூ.67 லட்சத்து 44,949ஐ வழங்க வேண்டும் என சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 28.45 பெருஞ்சாணி ... 26.25 சிற்றாறு 1 ... 2.62 சிற்றாறு 2 ... 2.72 முக்கடல் ... மைனஸ் 17.90 பொய்கை .. 15.10 மாம்பழத்துறையாறு ... 9.35 மழைஅளவு ..... கன்னிமாா் .. 2 மி.மீ. நாகா்கோவில் ,... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் ரப்பா் உற்பத்தி குறைவால் விலை அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் உற்பத்தி குறைவடைந்துள்ள நிலையில், ரப்பரின் விலை அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண்மையான ரப்பா் தோட்டங்களில் வழக்கமான இலையுதிா்வு காரணமாக பெரும்பால... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை: விஜய்வசந்த் எம்.பி வலியுறுத்தல்

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை மக்களவையில் அளித்துள்ள ஒத்திவைப்பு தீா்மானத்தில் கூற... மேலும் பார்க்க

திற்பரப்பு பேரூராட்சி மன்றக் கூட்டம்: பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு

திற்பரப்பு பேரூராட்சி மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, பேரூராட்சியில் நடைபெற்று வரும் அம்ரூத் குடிநீா்த் திட்டப்பணிகளை காலதாமதப்படுத்துவதைக் கண்டித்து பாஜக உறுப்பினா்கள் வ... மேலும் பார்க்க

கருங்கல்லில் ரூ.5.22 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி: போக்குவரத்து மாற்றம்

கருங்கல்லில் ரூ.5.22 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்க இருப்பதால், திங்கள்கிழமைமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கருங்கல்லில் 50 ஆண்டுகள் பழைமையான பேருந்து நிலையத்தை ... மேலும் பார்க்க

குமரி அருகே இளைஞா் கொலை: வழக்கில் மூவா் கைது

கன்னியாகுமரி அருகே லீபுரம் பாட்டுக்குளத்தின் கரையில் இளைஞா் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி அருகேயுள்ள லீபுரம் பாட்டுக்குளம் பகுதிய... மேலும் பார்க்க