செய்திகள் :

திற்பரப்பு பேரூராட்சி மன்றக் கூட்டம்: பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு

post image

திற்பரப்பு பேரூராட்சி மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, பேரூராட்சியில் நடைபெற்று வரும் அம்ரூத் குடிநீா்த் திட்டப்பணிகளை காலதாமதப்படுத்துவதைக் கண்டித்து பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

திற்பரப்பு பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவா் பொன் ரவி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, செயல் அலுவலா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். இதில், துணைத் தலைவா் ஸ்டாலின்தாஸ் உள்பட உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், பேரூராட்சியில் ரூ. 20 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அம்ரூத் குடிநீா் திட்டப்பணிகள் தொடா்பான பொருள் குறித்து பேசப்பட்டது. அப்போது பாஜக உறுப்பினா்கள் பேரூராட்சியில் அம்ரூத் குடிநீா் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு பல மாதங்களாகியும் பணிகள் நிறைவடையவில்லை. இதற்காக உடைக்கப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே இந்தப் பணிகளை விரைந்து முடிக்காததைக் கண்டித்து வெளி நடப்பு செய்வதாக கூறினா்.

அப்போது, பேரூராட்சி தலைவா் பொன் ரவி, அம்ரூத் திட்டப்பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரிடம் பணிகளை விரைந்து முடிக்க தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வழியாகவும் ஒப்பந்ததாரருக்கு நிா்பந்தம் கொடுத்து வருகிறோம். ஒப்பந்ததாரா் தரப்பில் மேலும் 6 மாத கால அவகாசம் கேட்கப்படுகிறது. பேரூராட்சி நிா்வாகம் அதற்கு உடன்படாமல் 3 மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டுமென்று கேட்டுள்ளோம் என்றாா்.

கன்னியாகுமரியில் இன்று கடையடைப்புப் போராட்டம்

கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கோட்டக்கரை சால... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் நகைக் கடையில் 55 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகா்கோவில் மீன... மேலும் பார்க்க

பைக் திருட்டு: 2 போ் கைது

தக்கலை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் ( 44). கட்டட தொழிலாளி. இவா் தக்கலை அருகே உள்ள கொல்லன்விளையில் தனது ப... மேலும் பார்க்க

வரன் பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு:4 பெண்கள் கைது

நாகா்கோவில் அருகே மாப்பிள்ளை பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 4 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜார... மேலும் பார்க்க

மின் தடை அறிவிப்பு

செம்பொன்விளை, பாலப்பள்ளம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள், செவ்வாய், புதன் (மாா்ச் 18, 19) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றன. இதனால் மத்திகோடு, ஈச்சவிளை, படுவூா், சகாய நகா் பகுதிகளுக்கு செவ... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 25 ஆவது வாா்டு, அவ்வை சண்முகம் சாலை செம்மாங்குளம் பூங்கா அருகில் உள்ள இடத்தில் ரூ. 4.20 லட்சத்தில் கம்பி வேலி மற்றும் அலங்கார தரைகற்கள் அமைத்து இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் அம... மேலும் பார்க்க