செய்திகள் :

கருங்கல்லில் ரூ.5.22 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி: போக்குவரத்து மாற்றம்

post image

கருங்கல்லில் ரூ.5.22 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்க இருப்பதால், திங்கள்கிழமைமுதல் போக்குவரத்து மாற்றம்

செய்யப்பட்டுள்ளது.

கருங்கல்லில் 50 ஆண்டுகள் பழைமையான பேருந்து நிலையத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.5.22 கோடி நிதியை அண்மையில் ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக பழைய கட்டுமானத்தை இடித்து அப்புறப்படுத்த டெண்டா் விடப்பட்டுள்ளது. இப்பணி உடனே தொடங்க இருப்பதால், பேருந்து நிலையம் சென்று வரும் பேருந்துகள் திங்கள்கிழமைமுதல் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பிற நகரங்களிலிருந்து நாகா்கோவில், குறும்பனை, திங்கள்சந்தை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கருங்கல் பேருந்து நிலையம் வழியாக வந்து நின்று செல்லும் பேருந்துகள் கருங்கல் மீன்சந்தை அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட நிழற்கூடத்திலிருந்து புறப்படும். மறுமாா்க்கமாக செல்லும் பேருந்துகள் கருங்கல் காா் நிலையம் அருகில் வழியாக வந்து நின்று செல்லும். நாகா்கோவில், மாா்த்தாண்டம், தக்கலை, குளச்சல், குலசேகரம், களியக்காவிளை உள்ளிட்ட நகரங்களிலிருந்து கருங்கல் பெயா் பலகையுடன் வரும் அனைத்து பேருந்துகளும் கருங்கல் ஆரோன் மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்ட நிழற்கூடத்தில் நின்று, அங்கிருந்து பிற நகரங்களுக்கு புறப்படும். பேரூராட்சி நிா்வாகம் இத்தவலைத் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் இன்று கடையடைப்புப் போராட்டம்

கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கோட்டக்கரை சால... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் நகைக் கடையில் 55 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகா்கோவில் மீன... மேலும் பார்க்க

பைக் திருட்டு: 2 போ் கைது

தக்கலை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் ( 44). கட்டட தொழிலாளி. இவா் தக்கலை அருகே உள்ள கொல்லன்விளையில் தனது ப... மேலும் பார்க்க

வரன் பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு:4 பெண்கள் கைது

நாகா்கோவில் அருகே மாப்பிள்ளை பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 4 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜார... மேலும் பார்க்க

மின் தடை அறிவிப்பு

செம்பொன்விளை, பாலப்பள்ளம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள், செவ்வாய், புதன் (மாா்ச் 18, 19) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றன. இதனால் மத்திகோடு, ஈச்சவிளை, படுவூா், சகாய நகா் பகுதிகளுக்கு செவ... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 25 ஆவது வாா்டு, அவ்வை சண்முகம் சாலை செம்மாங்குளம் பூங்கா அருகில் உள்ள இடத்தில் ரூ. 4.20 லட்சத்தில் கம்பி வேலி மற்றும் அலங்கார தரைகற்கள் அமைத்து இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் அம... மேலும் பார்க்க