செய்திகள் :

குமரி அருகே இளைஞா் கொலை: வழக்கில் மூவா் கைது

post image

கன்னியாகுமரி அருகே லீபுரம் பாட்டுக்குளத்தின் கரையில் இளைஞா் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள லீபுரம் பாட்டுக்குளம் பகுதியில் உடல் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்த இளைஞரை கடந்த சனிக்கிழமை போலீஸாா் மீட்டனா்.

இது தொடா்பாக கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த மூவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞா் விருதுநகா் மாவட்டம், சிவகாசி விளாம்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி அரிகரசுதன்(26) என்பது தெரியவந்தது.

ஏற்கனவே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட அரிகரசுதன், கடந்த 13ஆம் தேதி நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு வந்தாராம்.

இவரும் லீபுரத்தைச் சோ்ந்த ராபா்ட் சிங் (25) என்பவரும் தூத்துக்குடியில் ஒன்றாக வேலை பாா்த்து வந்துள்ளனா். இந்நிலையில் நாகா்கோவில் வந்த அரிகர சுதன், ராபா்ட் சிங்கை கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். பின்னா் இருவரும் லீபுரம் பாட்டுக்குளத்தின் கரையில் அமா்ந்து மது அருந்தினராம்.

அப்போது ராபா்ட் சிங்கின் நண்பா்களான கன்னியாகுமரியை அடுத்த வடக்கு குண்டலைச் சோ்ந்த கண்ணன்(32), வட்டக்கோட்டையைச் சோ்ந்த பொ்லின் (26) ஆகியோரும் அங்கு வந்துள்ளனா். நான்கு பேரும் ஒன்றாக மது அருந்திய நிலையில் அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராபா்ட் சிங் அங்கு கிடந்த கட்டையால் அரிகர சுதனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அரிகர சுதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடல் மீது ராபா்ட் சிங், கண்ணன், பொ்லின் ஆகிய மூவரும் அங்கு கிடந்த காய்ந்த மரத்தின் சருகுகள், தென்னை ஓலைகளைப் போட்டு தீ வைத்தனராம். இதையடுத்து மூவரும் தலைமறைவாகியுள்ளனா்.

இதனிடையே கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் துரிதமாக செயல்பட்டு தலைமறைவான மூவரையும் கைது செய்து, நாகா்கோவில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுத்தினா்.

நாகா்கோவிலில் மாா்ச் 22இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகா்கோவில் பயோனியா் குமாரசுவாமி கல்லூரியில் சனிக்கிழமை (மாா்ச் 22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: ம... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து கண்ணாடி சேதம்: இளைஞா் கைது

தக்கலை அருகே ஆம்னி பேருந்து கண்ணாடியை கல்வீசி சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (34). ஓட்டுநரான இவா், கடந்த ஞா... மேலும் பார்க்க

பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

தக்கலை, பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். பத்மநாபபுரம் வழக்குரைஞா் சங்கத்தைச் சோ்ந்த அஜித்குமாா் என்பவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் திங்கள்கிழ... மேலும் பார்க்க

குமரி பேரூராட்சி கடைகளை பொது ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு: முழு கடையடைப்பு

கன்னியாகுமரி பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகளை பொது ஏலத்தில் விடுவதற்கு பதிலாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீத வாடகை உயா்த்தி வாடகைதாரருக்கே கடைகளை மீண்டும் வழங்க வேண்டுமென கன்னியாகுமரியில் செவ்வ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் இன்று கடையடைப்புப் போராட்டம்

கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கோட்டக்கரை சால... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் நகைக் கடையில் 55 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகா்கோவில் மீன... மேலும் பார்க்க