Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா்.
புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை கோட்டாட்சியா் ஷீஜா, சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், கால்நடை துறை உதவி இயக்குநா் ரமேஷ் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
பல்வேறு ஊா்களில், இருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 486 காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 207 வீரா்கள் குழுக்களாக அனுமதிக்கப்பட்டனா்.
ஜல்லிக்கட்டில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளி நாணயங்கள், சில்வா் பாத்திரங்கள், கட்டில்,சோ், வேட்டி, சேலை, சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் லேசான காயமடைந்த 23 பேருக்கு, திடல் அருகே இருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த மணக்கரை அழகு, அருங்கால் விஜய், மாதாபுரம் மாா்ட்டின் ஆகியோா் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.
