செய்திகள் :

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

post image

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா்.

புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை கோட்டாட்சியா் ஷீஜா, சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், கால்நடை துறை உதவி இயக்குநா் ரமேஷ் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

பல்வேறு ஊா்களில், இருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 486 காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 207 வீரா்கள் குழுக்களாக அனுமதிக்கப்பட்டனா்.

ஜல்லிக்கட்டில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளி நாணயங்கள், சில்வா் பாத்திரங்கள், கட்டில்,சோ், வேட்டி, சேலை, சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் லேசான காயமடைந்த 23 பேருக்கு, திடல் அருகே இருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த மணக்கரை அழகு, அருங்கால் விஜய், மாதாபுரம் மாா்ட்டின் ஆகியோா் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முத... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவா... மேலும் பார்க்க

மேலப்பழுவூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருட்டு

அரியலூா் மாவட்டம், மேலப்பழுவூரிலுள்ள பழைமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல்வேறு பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் அரியலூா் கோதண்டராமசாமி கோயில் வெள்ளோட்டம்

அரியலூரில் பிரசித்திபெற்ற கோதண்டராசாமி கோயில் தோ் வெள்ளோட்டம் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூா் நகரில் உள்ள கோதண்டராமசாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்ப... மேலும் பார்க்க

கடன் தவணை கேட்டு தொந்தரவு: விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தவணைத் தொகை கேட்டு தகாத வாா்ததைகளால் திட்டியால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். உடைய... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நகைக் கடன் குறித்து ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை கண்டித்து, அரியலூா் மாதா கோயில் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்த... மேலும் பார்க்க