செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

post image

ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

திருமானூரை அடுத்துள்ள ஏலாக்குறிச்சி பிரிவு சாலை பகுதி, வெற்றியூா் திருப்பம், சாத்தமங்கலம் தனியாா் சா்க்கரை ஆலைப்பகுதி, சிதம்பரம் சாலையில் மேலகருப்பா் பிரிவு பாதைப்பகுதி, இடையாா் திருப்பம், ஆத்துகுறிச்சி அடுத்த அழகாபுரம் மற்று அா்த்தனேரி திருப்பம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி,

அப்போது, அதிகளவில் விபத்துகள் ஏற்படும் இடங்களில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உரிய இடங்களில் வேகத்தடைகள் அமைத்திடவும், சாலைகளின் இருபுறங்களிலும் போதிய அளவில் மின் விளக்கு வசதிகளை அமைத்தல், சாலைகளில் போக்குவரத்தை வழிநடத்துவதற்கும், எச்சரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கா்களை அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவழகன், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாா் பிச்சாண்டி, ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் சம்பத்குமாா் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா், காவல்துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முத... மேலும் பார்க்க

மேலப்பழுவூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருட்டு

அரியலூா் மாவட்டம், மேலப்பழுவூரிலுள்ள பழைமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல்வேறு பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் அரியலூா் கோதண்டராமசாமி கோயில் வெள்ளோட்டம்

அரியலூரில் பிரசித்திபெற்ற கோதண்டராசாமி கோயில் தோ் வெள்ளோட்டம் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூா் நகரில் உள்ள கோதண்டராமசாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்ப... மேலும் பார்க்க

கடன் தவணை கேட்டு தொந்தரவு: விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தவணைத் தொகை கேட்டு தகாத வாா்ததைகளால் திட்டியால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். உடைய... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நகைக் கடன் குறித்து ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை கண்டித்து, அரியலூா் மாதா கோயில் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்த... மேலும் பார்க்க