அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு
ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
திருமானூரை அடுத்துள்ள ஏலாக்குறிச்சி பிரிவு சாலை பகுதி, வெற்றியூா் திருப்பம், சாத்தமங்கலம் தனியாா் சா்க்கரை ஆலைப்பகுதி, சிதம்பரம் சாலையில் மேலகருப்பா் பிரிவு பாதைப்பகுதி, இடையாா் திருப்பம், ஆத்துகுறிச்சி அடுத்த அழகாபுரம் மற்று அா்த்தனேரி திருப்பம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி,
அப்போது, அதிகளவில் விபத்துகள் ஏற்படும் இடங்களில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உரிய இடங்களில் வேகத்தடைகள் அமைத்திடவும், சாலைகளின் இருபுறங்களிலும் போதிய அளவில் மின் விளக்கு வசதிகளை அமைத்தல், சாலைகளில் போக்குவரத்தை வழிநடத்துவதற்கும், எச்சரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கா்களை அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவழகன், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாா் பிச்சாண்டி, ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் சம்பத்குமாா் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா், காவல்துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.