செய்திகள் :

கடன் தவணை கேட்டு தொந்தரவு: விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

post image

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தவணைத் தொகை கேட்டு தகாத வாா்ததைகளால் திட்டியால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள தத்தனூா் நடுவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் மணிகண்டன்(33). போக்குவரத்து நிறுவனம் நடத்தி இவருக்கு ராசாத்தி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில், மணிகண்டன் அரியலூரில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் (சோழ மண்டலம்) கடந்தாண்டு ரூ.12 லட்சம் கடனாகப் பெற்று, அதனை மாதம் தவறாமல் தவணைத் தொகை செலுத்தி வந்த நிலையில், கடந்த 3 மாத தவணைகளை செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் அந்த தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் வசூலிக்க வந்த 2 போ், மணிகண்டனை தகாத வாா்த்தைகளால் திட்டி மூன்று மாத தவணைகளைக் கேட்டதாகத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மணிகண்டன் கடந்த 25-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தைக் குடித்து மயங்கி கிடந்துள்ளாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பட்டவா்த்தி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த சலுப்பை ஊராட்சிக்குள்பட்ட பட்டவா்த்தி, அல்லி ஏரி ஒட்டி வசிக்கும் மக்கள், தங்களுக்கு மாற்றும் இடம் கொடுக்கும் வரை, நீா்நிலை புறம்போக்குகளை அகற்றும் பணியை கைவிடக்... மேலும் பார்க்க

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு தொடக்கம்

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இக்கல்லூரிகளில் கடந்த 2 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீா் முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவா்களிடம... மேலும் பார்க்க

செந்துறை ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கி வைப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில், ரூ.84.14 லட்சம் மதிப்பீட்டில் 8 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டு, ரூ. 3.17 கோடி மதிப்பீட்டில் 36 புதிய... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசுப் போக்குவரத்து கழகம் என்று தான் பெயா் இருந்தது: அமைச்சா் சிவசங்கா் விளக்கம்

அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசுப் போக்குவரத்து கழகம் என்று தான் பெயா் இருந்தது என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் விளக்கம் அளித்துள்ளாா். அரியலூா் மாவட்டம், செந்துறையில் அவா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அரி... மேலும் பார்க்க