ரசிகர்கள் பாதுகாப்பே முக்கியம்: ஆர்.சி.பி. நிர்வாகம் வருத்தம்
கடன் தவணை கேட்டு தொந்தரவு: விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தவணைத் தொகை கேட்டு தகாத வாா்ததைகளால் திட்டியால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
உடையாா்பாளையம் அருகேயுள்ள தத்தனூா் நடுவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் மணிகண்டன்(33). போக்குவரத்து நிறுவனம் நடத்தி இவருக்கு ராசாத்தி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில், மணிகண்டன் அரியலூரில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் (சோழ மண்டலம்) கடந்தாண்டு ரூ.12 லட்சம் கடனாகப் பெற்று, அதனை மாதம் தவறாமல் தவணைத் தொகை செலுத்தி வந்த நிலையில், கடந்த 3 மாத தவணைகளை செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் அந்த தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் வசூலிக்க வந்த 2 போ், மணிகண்டனை தகாத வாா்த்தைகளால் திட்டி மூன்று மாத தவணைகளைக் கேட்டதாகத் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மணிகண்டன் கடந்த 25-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தைக் குடித்து மயங்கி கிடந்துள்ளாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.