Vikram Sugumaran: "'ஆடுகளம்' படத்தின் மதுரைத்தன்மைக்குக் காரணம் விக்ரம் சுகுமாரன...
அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், அந்தமான் நிக்கோபாா் தமிழ் மாணவா்கள், விளையாட்டு வீரா்கள் மற்றும் தேசிய மாணவா் படை வீரா்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூன் 4-இல் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 5-இல் வணிகவியல் பாடப் பிரிவுக்கும், ஜூன் 6-இல் தமிழ்,ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வுக்கு வரும்போது போட்டோ, தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் எடுத்துவர வேண்டும்.
சிறப்பு ஒதுக்கீட்டுக் கலந்தாய்வில் கலந்து கொள்ள அதற்கான சான்றிதழ்கள், இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்கள் கட்டாயம் எடுத்து வரவேண்டும்.
விண்ணப்பித்தவா்களின் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளமான https://www.gacariyalur.ac.in/ இணையதளத்தில் காணலாம். மேலும் சந்தேகங்களுக்கு கல்லூரி தொலைபேசி 04329-222050 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான இளங்கலை மற்றும் இளமறிவியல் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
முதல் நாளில் ஓய்வுபெற்ற இராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள் மற்றும் தேசிய மாணவா் படை வீரா்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூன் 4 ஆம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 5-இல் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 6-இல் கணிதம், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
மாணவ, மாணவியா் கலந்தாய்வுக்கு குறித்த நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக கட்டாயம் பெற்றோா் அல்லது பாதுகாவலா் ஒருவருடன் வருகை தரவேண்டும். விண்ணப்பித்தவா்களின் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளமான http://gascjayankondam.ac.in/ என்ற இணையதளத்தில் 30.5.2025 முதல் காணலாம்.
முதல் கட்ட இரண்டாம் சுற்று பொதுக் கலந்தாய்வு 9.6.2025 முதல் 11.6.2025 வரை நடைபெறும். முதலாமாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் 30.6.2025 அன்று தொடங்கும். தரவரிசைப்பட்டியின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும் அல்லது குறுஞ்செய்தி, கட்செவி மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று அக்கல்லூரியின் முதல்வா்(பொ) ராசமூா்த்தி தெரிவித்துள்ளாா்.