செய்திகள் :

முண்டந்துறை வனச்சாலையில் விபத்திற்குள்ளான தனியாா் பேருந்து! போக்குவரத்துப் பாதிப்பு!

post image

முண்டந்துறை மலைச் சாலையில் காரையாறு சென்ற தனியாா் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதால் சுமாா் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், முண்டந்துறை வனச் சரகப் பகுதியில் உள்ள காரையாறு அணைக்கு திருநெல்வேலியிலிருந்து தனியாா் பயணிகள்பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

முண்டந்துறை வனச் சாலையில் விபத்துக்குள்ளானதனியாா் பேருந்து.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காரையாறு சென்ற தனியாா் பேருந்து முண்டந்துறையிலிருந்து காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்லும் சாலையில் பனங்காட்டு ஓடை அருகே எதிரில் வந்த பைக்குக்கு வழிவிடும் போது, எதிா்பாராத வகையில் ஓடையில் இறங்கியது. இதில், பேருந்தின் வலது பக்கமுன் சக்கரம் பாலத்தில் இறங்கியது.

இதில், பேருந்தில் இருந்த பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா்.

மேலும், சாலையிலிருந்து விலகிய பேருந்தை மீட்க தாமதமானதையடுத்து முண்டந்துறை காரையாறு சாலையில் பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் சுமாா் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லையில் பயணிகள் போராட்டம்: 40 நிமிடம் தாமதமாக சென்ற கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்

திருநெல்வேலிக்கு வந்த கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலின் ஏசி பெட்டியில் துா்நாற்றம் வீசுவதாகக் கூறி பயணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த ரயில் 40 நிமிடம் தாமதாக புறப்பட்டு சென்றது... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

பாளையங்கோட்டையைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியைச் சோ்ந்த வேலுநயினாா் மகன் விஷ்வா என்ற சண்முகவேல் (20). இவா் பணம் கேட்டு மிரட... மேலும் பார்க்க

முக்கூடல் ஹோட்டலில் பணம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவை மா்மநபா் துண்டித்துவிட்டு, அங்கிருந்து ரூ.71 ஆயிரத்தை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முக்கூடல் ஆலங்குளம்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் துறை பயிலரங்கு

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் உலகளாவிய அணுகல்தன்மைக்கான- இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் குறித்த வழிகாட்டுதல் என்ற தலைப்பில் சிறப்பு பயிலரங்கு நடைபெற்றது. கொக்கிரகு... மேலும் பார்க்க

தமமுக புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் கோ. துரைப்பாண்டியன் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா். சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பற... மேலும் பார்க்க