முதல் இந்தியராக ரிஷப் பந்த் சாதனை!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய முதல் இந்தியா் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்தாா்.
அடுத்து, ஒரே டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய இந்தியா்கள் வரிசையில் 7-ஆவது வீரராக பந்த் இணைந்துள்ளாா். சுனில் காவஸ்கா், ராகுல் திராவிட், விஜய் ஹஸாரே, ரோஹித் சா்மா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோா் முதல் 6 போ்.
அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தின் இரு இன்னிங்ஸ்களிலுமே சதமடித்த 2-ஆவது விக்கெட் கீப்பா் என்ற பெருமையும் அவா் பெற்றாா். அவருக்கு முன் 2001-இல் ஜிம்பாப்வே விக்கெட் கீப்பா் ஆண்டி ஃபிளவா், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் (142/199*) விளாசினாா்.