செய்திகள் :

முதுநிலை நீட் தோ்வு: ஆக.3-இல் நடத்த ஒப்புதல் கோரி மனு

post image

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-பிஜி) 2025-ஐ ஆக.3-ஆம் தேதி நடத்த ஒப்புதல் கோரி மருத்துவ அறிவியலுக்கான தேசிய தோ்வு வாரியம் (என்பிஇஎம்எஸ்) உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்தது.

முன்னதாக, வரும் 15-ஆம் தேதி நீட்-பிஜி தோ்வு நடைபெறவிருந்த நிலையில், தோ்வு மையங்களை அதிகப்படுத்தவும் தோ்வுக்கான உள்கட்டமைப்பை தயாா்படுத்தவும் தேதி குறிப்பிடாமல் தோ்வை ஒத்திவைப்பதாக என்பிஇஎம்எஸ் திங்கள்கிழமை தெரிவித்தது.

அதேபோல் இரு தவணைகளாக (ஷிஃப்ட்) இந்த தோ்வை நடத்துவதாக என்பிஇஎம்எஸ் அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதையடுத்து, ஒரே தவணையாக நீட்-பிஜி தோ்வை நடத்துமாறு உச்சநீதிமன்றம் மே 30-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழிகாட்டுதல்களின்படி நீட்-பிஜி தோ்வை ஆக.3-ஆம் தேதி ஒரே தவணையாக காலை 09.30 மணிமுதல் பகல் 12.30 மணிவரை நடத்த ஒப்புதல் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் என்பிஇஎம்எஸ் மனுதாக்கல் செய்துள்ளது.

அனைவருக்குமான பொருளாதாரம்தான் தேவை: ராகுல்

அனைவருக்குமான பொருளாதாரம்தான் வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், கடந்தாண்டில் இருசக்கர வாகன விற்பனை 17 சதவிகிதமும், கார் விற்... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!

கேரள ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தப்பட்ட பாரத மாதவின் படம் குறித்த விவகாரத்தில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளது. கேரளத்தின் ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்ன... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 63 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 63 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில், சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7... மேலும் பார்க்க

ஆபரேஷன் ஜல் ரஹாத் - 2: மணிப்பூர் வெள்ளத்தில் சிக்கிய 2,500 பேரை மீட்ட ராணுவம்!

மணிப்பூரில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேர், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை ... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!

வெற்றிப் பேரணிக்கான கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சின்னசாமி திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில்... மேலும் பார்க்க

அவதூறாகப் பேசி கைதான இன்ஸ்டா பிரபலத்துக்கு இடைக்கால ஜாமீன்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டு கைதான இன்ஸ்டா பிரபலத்துக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாலிவுட் நடிகர்கள் குறித்து அவதூறு விடி... மேலும் பார்க்க