ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!
முறப்பநாடு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவிடம் தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெருமாள் ஞாயிற்றுக்கிழமை நேரில் மனு அளித்தாா்.
இது குறித்து அவா் அளித்த மனு: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத சொக்கநாதா் கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். இந்தக் கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, இக்கோயில் புனரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் சேகா் பாபு, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளாா்.