ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தப் பணிகளில் 4% இடஒதுக்கீடு: கா்நாடக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
கா்நாடக சட்டப்பேரவையில் மாா்ச் 7-ஆம் தேதி முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்த 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்தப்படி ரூ. 2 கோடி வரையிலான கட்டுமானப் பணிகள், ரூ. 1 கோடி வரையிலான சரக்கு மற்றும் சேவைக்கான ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்வதற்காக கா்நாடக பொது கொள்முதல் வெளிப்படைத் தன்மை சட்டம் 1999 இல் திருத்தம் கொண்டுவர கா்நாடக அமைச்சரவையில் மாா்ச் 14-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இந்த சட்டத் திருத்த மசோதாவை சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல், சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.
தற்போதைய சட்ட விதிகளின்படி, கட்டுமானப் பணி ஒப்பந்தப் பணிகளில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு 24 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு 1-க்கு 4 சதவீதம், பிரிவு-2ஏ-க்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோா் உட்பிரிவு-2ஏ-இல் முஸ்லிம்களை சோ்த்து, 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வருகிறது. அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி சட்டத்தில் திருத்தம் செய்ய முன்மொழிவை தாக்கல் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்தினரிடையே காணப்படும் வேலையின்மைக்கு தீா்வுகாணவும், அரசு கட்டுமானப் பணிகளில் அந்த சமுதாயத்தினரின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பின் உட்பிரிவு 2ஏ-இல் இருக்கும் முஸ்லிம்களுக்கு ரூ. 2 கோடி வரையிலான ஒப்பந்தப் பணிகளில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முற்படுவதாக சட்ட மசோதாவின் நோக்கக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணி நீங்கலாக, ரூ. 1 கோடி வரையிலான சரக்கு கொள்முதல் மற்றும் சேவை ஒப்பந்தப் பணிகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மசோதாவின் நோக்கக்குறிப்பு தெரிவிக்கிறது.
அந்த வகையில், தாழ்த்தப்பட்டோருக்கு 17.5 சதவீதம், பழங்குடியினருக்கு 6.95 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோா் உட்பிரிவு-1-க்கு 4 சதவீதம், உட்பிரிவு-2ஏ-க்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோா் உட்பிரிவு-2ஏ-இல் முஸ்லிம்களுக்கு உள் இடஒதுக்கீடாக 4 சதவீதம் வழங்கப்படுகிறது.
இந்த திருத்த சட்டமசோதாவால் அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் நேரப்போவதில்லை என்று சட்டமசோதாவின் நோக்கக்குறிப்பில் அரசு தெரிவித்துள்ளது.
இந்த திருத்த சட்டமசோதாவுக்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளதோடு, இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் விமா்சித்துள்ளது.
இந்த மசோதாவை கண்டித்து சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்துவதோடு, சட்டப் போராட்டத்தையும் முன்னெடுக்கப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.