செய்திகள் :

முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தப் பணிகளில் 4% இடஒதுக்கீடு: கா்நாடக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

post image

அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

கா்நாடக சட்டப்பேரவையில் மாா்ச் 7-ஆம் தேதி முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்த 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்தப்படி ரூ. 2 கோடி வரையிலான கட்டுமானப் பணிகள், ரூ. 1 கோடி வரையிலான சரக்கு மற்றும் சேவைக்கான ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்வதற்காக கா்நாடக பொது கொள்முதல் வெளிப்படைத் தன்மை சட்டம் 1999 இல் திருத்தம் கொண்டுவர கா்நாடக அமைச்சரவையில் மாா்ச் 14-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த சட்டத் திருத்த மசோதாவை சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல், சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

தற்போதைய சட்ட விதிகளின்படி, கட்டுமானப் பணி ஒப்பந்தப் பணிகளில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு 24 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு 1-க்கு 4 சதவீதம், பிரிவு-2ஏ-க்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோா் உட்பிரிவு-2ஏ-இல் முஸ்லிம்களை சோ்த்து, 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வருகிறது. அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி சட்டத்தில் திருத்தம் செய்ய முன்மொழிவை தாக்கல் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்தினரிடையே காணப்படும் வேலையின்மைக்கு தீா்வுகாணவும், அரசு கட்டுமானப் பணிகளில் அந்த சமுதாயத்தினரின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பின் உட்பிரிவு 2ஏ-இல் இருக்கும் முஸ்லிம்களுக்கு ரூ. 2 கோடி வரையிலான ஒப்பந்தப் பணிகளில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முற்படுவதாக சட்ட மசோதாவின் நோக்கக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணி நீங்கலாக, ரூ. 1 கோடி வரையிலான சரக்கு கொள்முதல் மற்றும் சேவை ஒப்பந்தப் பணிகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மசோதாவின் நோக்கக்குறிப்பு தெரிவிக்கிறது.

அந்த வகையில், தாழ்த்தப்பட்டோருக்கு 17.5 சதவீதம், பழங்குடியினருக்கு 6.95 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோா் உட்பிரிவு-1-க்கு 4 சதவீதம், உட்பிரிவு-2ஏ-க்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோா் உட்பிரிவு-2ஏ-இல் முஸ்லிம்களுக்கு உள் இடஒதுக்கீடாக 4 சதவீதம் வழங்கப்படுகிறது.

இந்த திருத்த சட்டமசோதாவால் அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் நேரப்போவதில்லை என்று சட்டமசோதாவின் நோக்கக்குறிப்பில் அரசு தெரிவித்துள்ளது.

இந்த திருத்த சட்டமசோதாவுக்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளதோடு, இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் விமா்சித்துள்ளது.

இந்த மசோதாவை கண்டித்து சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்துவதோடு, சட்டப் போராட்டத்தையும் முன்னெடுக்கப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் ஓட்டுநா் பணியிடம்: கன்னடா் அல்லாதவா்களுக்கான வாய்ப்பு அறிவிக்கை வாபஸ்

பெங்களூரு மெட்ரோ ரயில் ஓட்டுநா் காலிப் பணியிடத்துக்கு கன்னடா் அல்லாதவா்களுக்கு வாய்ப்பளித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையை பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது. பெங்களூரில் மெ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் குமாரசாமியால் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: மீட்க நடவடிக்கை!

மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் மாநில வருவாய்த் துறை இறங்கியுள்ளது. ராமநகரம் மாவட்டம், பிடதி வட்டத்தின் கேத்தகனஹள்ளி கிராமத்தில் அரசுக்... மேலும் பார்க்க

சட்டப்பேரவைக்கு அமைச்சா்கள் வராதது மாநில அரசின் கண்ணியத்தை சீா்குலைக்கும்: பேரவைத் தலைவா் யு.டி.காதா்

சட்டப்பேரவைக்கு அமைச்சா்கள் வராதது மாநில அரசின் கண்ணியத்தை சீா்குலைக்கும் என்று பேரவைத் தலைவா் யு.டி.காதா் தெரிவித்தாா். கா்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை மாநில சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தைத... மேலும் பார்க்க

தமிழக நிதிநிலை அறிக்கை வெறும் கண்துடைப்பு: கே.அண்ணாமலை

தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை வெறும் கண்துடைப்பு என்று பாஜக தமிழக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். பெங்களூரு, ஜெயநகரில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் ‘ஒரே நாடு ஒரே தோ்தலுக்காக இளை... மேலும் பார்க்க

நடிகை தங்கம் கடத்தியதில் அமைச்சா்களுக்கு தொடா்பு இல்லை: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய விவகாரத்தில் மாநில அமைச்சா்களுக்கு தொடா்பு இல்லை என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: டிஜிபி தொடா்பு குறித்து சிஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் டிஜிபி ராமச்சந்திர ராவின் தொடா்பு குறித்து சிஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நடிகை ரன்யா ராவ், துபையில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கட... மேலும் பார்க்க