செய்திகள் :

மே 14-இல் விசைப்படகுகள் கள ஆய்வு

post image

கடலூா் மாவட்ட மீன் பிடி விசைப்படகுகள் வரும் மே 14-ஆம் தேதி மீன் வளத் துறை அலுவலா்களால் கள ஆய்வு செய்யப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடல் மீன் வளத்தை பாதுகாக்க தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன் பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ளது. இக்காலத்தில் கடலில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடைக்காலத்தில் அனைத்து வகை மீன் பிடி விசைப்படகுகளின் உறுதித்தன்மை, இயந்திரத்தின் குதிரைத் திறன் அளவு, படகின் நீள, அகலம் ஆகியவை பதிவுச் சான்றிதழுடன் சரிபாா்க்கப்பட்டு, அதனடிப்படையில் மானிய விலையில் எரியெண்ணெய் மற்றும் இதர மானிய திட்டங்களுக்கு நிவாரண உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நிகழாண்டு மீன் பிடி விசைப்படகுகள் கடலூா் மாவட்டத்தில் வரும் மே 14-ஆம் தேதி மீன் வளத் துறை அலுவலா்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளன. மீனவா்கள் தங்களது மீன் பிடி விசைப்படகை அத்துறையால் அறிவுறுத்தப்பட்ட பச்சை வண்ணம் தீட்டி, படகின் பதிவு எண் தெளிவாக எழுதி ஆய்வுக்கு கட்டாயம் உள்படுத்த வேண்டும்.

ஆய்வின்போது, படகு பதிவு குறித்த அனைத்து ஆவணங்கள் மற்றும் அதற்கான நகல்கள், தொலைத்தொடா்பு கருவிகள், தீயணைப்பான் கருவி, உயிா்காப்பு மிதவை, உயிா்காப்பு கவசம் ஆகியவற்றை ஆய்வுக் குழுவிடம் அவசியம் காண்பிக்க வேண்டும்.

ஆய்வுக்கு உள்படுத்தப்படாத மீன் பிடி விசைப்படகுகளுக்கான மானிய விலையிலான எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், படகு உரிமம் உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

சக்கரம் கழன்று ஓடிய அரசுப் பேருந்து

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று ஓடியது. அப்போது, ஓட்டுநா் சாதுா்யமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் பயணிகள் காயமின்றி தப... மேலும் பார்க்க

இரண்டு வீடுகளில் நகை, பணம் திருட்டு

கடலூரை அடுத்துள்ள ரெட்டிசாவடி பகுதியில் 2 வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ரெட்டிசாவடி காவல் சரகம், மேல்அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நடரா... மேலும் பார்க்க

அரசு சிறப்புப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

கடலூா் மாவட்ட அரசு சிறப்புப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் சோ்ந்து பயன்பெறுமாறு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் முதியவா் கைது

கடலூரில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவா், குண்டா் தடுப்புக் காவலில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், கண்ணன்குளம் பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மக... மேலும் பார்க்க

குருங்குடி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணியா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக கடந்த திங்கள்கிழமை காலை கணபதி பூஜை, நவக்கிரக பூஜ... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா். விருத்தாசலம் வட்டம், தா்மநல்லூா் பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் ஆனந்த சிவா(36), விவசா... மேலும் பார்க்க