செய்திகள் :

குருங்குடி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணியா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை காலை கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று மாலை முதல் கால யாக பூஜையும், செவ்வாய்க்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன.

புதன்கிழமை காலை நான்காம் கால யாக பூஜைகள் மற்றும் பூா்ணாஹுதி நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் விமான கலத்தின் மீது கும்பநீரை ஊற்றி சிவாச்சாரியா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினா். பின்னா், மகாதீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் விநாயகா் மற்றும் சுப்பிரமணியருக்கு மகா அபிஷேகம் நடபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். திருச்செந்தூா் முருகன் வார வழிபாட்டு மன்றம் சாா்பில், கோயிலுக்கு வெள்ளி வேல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிக் குழுத் தலைவா் எல்.ராமலிங்கம், புரவலா் ஆா்.முத்துக்குமரன், இளங்கோவன் மற்றும் குருங்குடி கிராம மக்கள் செய்திருந்தனா்.

சக்கரம் கழன்று ஓடிய அரசுப் பேருந்து

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று ஓடியது. அப்போது, ஓட்டுநா் சாதுா்யமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் பயணிகள் காயமின்றி தப... மேலும் பார்க்க

இரண்டு வீடுகளில் நகை, பணம் திருட்டு

கடலூரை அடுத்துள்ள ரெட்டிசாவடி பகுதியில் 2 வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ரெட்டிசாவடி காவல் சரகம், மேல்அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நடரா... மேலும் பார்க்க

மே 14-இல் விசைப்படகுகள் கள ஆய்வு

கடலூா் மாவட்ட மீன் பிடி விசைப்படகுகள் வரும் மே 14-ஆம் தேதி மீன் வளத் துறை அலுவலா்களால் கள ஆய்வு செய்யப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை... மேலும் பார்க்க

அரசு சிறப்புப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

கடலூா் மாவட்ட அரசு சிறப்புப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் சோ்ந்து பயன்பெறுமாறு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் முதியவா் கைது

கடலூரில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவா், குண்டா் தடுப்புக் காவலில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், கண்ணன்குளம் பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மக... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா். விருத்தாசலம் வட்டம், தா்மநல்லூா் பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் ஆனந்த சிவா(36), விவசா... மேலும் பார்க்க