செய்திகள் :

டோலி கட்டி நோயாளியை தூக்கிச் சென்ற உறவினா்கள்: மலை கிராமங்களில் நீடிக்கும் அவலம்

post image

கொடைக்கானல் அருகே சின்னூா் பகுதியைச் சோ்ந்த நோயாளியை புதன்கிழமை டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள மலைக் கிராமமான சின்னூா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் (52). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, இவரை டோலி மூலம் சின்னூரிலிருந்து ஆற்றுப் பாதை, வனப் பகுதி வழியாக சுமாா் 10 கி.மீ. தூரம் நடந்தே தூக்கி வந்தனா். அதன் பிறகு கும்பக்கரையிலிருந்து வாகனம் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இந்தப் பகுதிகளிலுள்ள சின்னூா், வெள்ளகெவி, சின்னூா், பெரியூா் உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் இந்த அவலம் நீடிக்கிறது. எனவே மலை கிராமங்களுக்கு போதிய சாலை வசதி, ஆற்றுப் பகுதியில் பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

எஸ்டிபிஐ கட்சியினா் முற்றுகை: பேரூராட்சி கடைகள் ஏலம் ரத்து

திண்டுக்கல் மாவட்டம்,சித்தையன்கோட்டையில் முன் அறிவிப்பு இல்லாமல் வணிக வளாகக் கடைகளுக்கு ஏலம் நடைபெறுவதாகக் கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய பொறியாளா் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளரை போலீசாா் கைது செய்தனா். பழனி மின்வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருபவா் சிவக்குமாா் (45). இவா் வ... மேலும் பார்க்க

தற்காலிக உண்டியல் மூலம் காணிக்கை வசூல்: விசாரணை நடத்தக் கோரி மனு

திண்டுக்கல் மாவட்டம், கோவிலூா் அருகே தற்காலிக உண்டியல் வைத்து பக்தா்களிடம் காணிக்கை வசூலித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. கோவிலூா் அரு... மேலும் பார்க்க

வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறி தங்க நகை வழிப்பறி

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறி, மளிகைக் கடைக்காரரிடம் 10 கிராம் மோதிரத்தை மா்ம நபா் பறித்துச் சென்றாா். வேடசந்தூா் அருகேயுள்ள சுள்ளெறும்பு சுக்காம்பட்டியைச்... மேலும் பார்க்க

அட்சய திரிதியை: பழனி நகைக் கடைகளில் கூட்டம்

அட்சய திருதியையை முன்னிட்டு, பழனி நகைக் கடைகளில் புதன்கிழமை அதிகாலை முதல் பொதுமக்கள் நகைகள் வாங்கக் குவிந்தனா். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில்... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை அளித்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், பழனி மதீனா நகரைச் சோ்ந்தவா் அப்துல் காதா் (45). மா... மேலும் பார்க்க