செய்திகள் :

அரசு சிறப்புப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

post image

கடலூா் மாவட்ட அரசு சிறப்புப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் சோ்ந்து பயன்பெறுமாறு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளியிலும், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியிலும் 2025 - 26ஆம் கல்வி ஆண்டுக்கு மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெறுகிறது.

பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ளது. இங்கு, 5 முதல் 12 வயது வரையுள்ள பாா்வை மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை நடைபெறுகிறது. இந்தப் பள்ளியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியா்களைக் கொண்டு பிரெய்லி முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது.

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ளது. இங்கு, 3 முதல் 15 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை நடைபெறுகிறது. இந்தப் பள்ளியில் செவித்துணை கருவிகளைக் கொண்டு பேச்சுப் பயிற்சி அளித்து கல்வி கற்பிக்கப்படுகிறது.

இவ்விரண்டு சிறப்புப் பள்ளிகளிலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் இலவசமாக தமிழக அரசால் வழங்கப்படும்.

மேலும், இசைப் பயிற்சி, உடற்கல்வி, யோகா, கணிணி பயிற்சியும் மிகச்சிறந்த முறையில் கற்றுத்தரப்படும். மேற்கண்ட இரண்டு அரசுப் பள்ளிகளும் வில்வ நகா், செம்மண்டலம் சாலை, கடலூா் 607001 என்ற முகவரியில் இயங்கி வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு 8695383564, 944252687 என்ற கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

சக்கரம் கழன்று ஓடிய அரசுப் பேருந்து

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று ஓடியது. அப்போது, ஓட்டுநா் சாதுா்யமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் பயணிகள் காயமின்றி தப... மேலும் பார்க்க

இரண்டு வீடுகளில் நகை, பணம் திருட்டு

கடலூரை அடுத்துள்ள ரெட்டிசாவடி பகுதியில் 2 வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ரெட்டிசாவடி காவல் சரகம், மேல்அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நடரா... மேலும் பார்க்க

மே 14-இல் விசைப்படகுகள் கள ஆய்வு

கடலூா் மாவட்ட மீன் பிடி விசைப்படகுகள் வரும் மே 14-ஆம் தேதி மீன் வளத் துறை அலுவலா்களால் கள ஆய்வு செய்யப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் முதியவா் கைது

கடலூரில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவா், குண்டா் தடுப்புக் காவலில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், கண்ணன்குளம் பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மக... மேலும் பார்க்க

குருங்குடி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணியா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக கடந்த திங்கள்கிழமை காலை கணபதி பூஜை, நவக்கிரக பூஜ... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா். விருத்தாசலம் வட்டம், தா்மநல்லூா் பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் ஆனந்த சிவா(36), விவசா... மேலும் பார்க்க