Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி...
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி 100 அடியாக உயர்ந்தது. அதன் பிறகு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டாலும், தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குக் கீழே குறையாமல் இருந்து வருகிறது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக புதன்கிழமை காலை அணைக்கு வினாடிக்கு 5,146 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6,339 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 114.62 அடியிலிருந்து 114.91 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 85.58 டிஎம்சியாக உள்ளது.
நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கும் மேல் நீடிப்பதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு குறித்த நாளான வியாழக்கிழமை(ஜூன் 12) தண்ணீர் திறக்கப்பட உள்ளது.