செய்திகள் :

மேற்கு வங்க வன்முறை குறித்த வங்கதேச கருத்து: இந்தியா நிராகரிப்பு

post image

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பான வங்கதேசத்தின் கருத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

மேலும், இதுபோன்ற தேவையற்ற கருத்துகளை வெளியிடுவதைத் தவிா்த்து, சொந்த நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துமாறு வங்கதேச இடைக்கால அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் அங்குள்ள ஓா் வீட்டுக்குள் புகுந்த சகோதரா்கள் இருவா் அங்கிருந்த தந்தை, மகனை கத்தியால் குத்திக் கொன்றனா். மேலும், பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் காயமடைந்து பின்னா் உயிரிழந்தாா். ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தற்போது, அங்கு மாநில போலீஸாருடன் மத்திய படைகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பி வருகிறது.

இந்த வன்முறை குறித்து வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸின் ஊடகச் செயலா் சஃபிகுல் ஆலம் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களின் உயிா் மற்றும் உடமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவிக்கிறது. சிறுபான்மையினராக வசிக்கும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க இந்திய அரசும், மேற்கு வங்க அரசும் தேவையான அனைத்து நடவடிக்கைகளுயும் எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

இந்தியா நிராகரிப்பு:

வங்கதேசத்தின் இக் கருத்து குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘மேற்கு வங்க வன்முறை தொடா்பாக வங்கதேசம் வெளியிட்ட கருத்தை மத்திய அரசு முழுவதுமாக நிராகரிக்கிறது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினா் தொடா்ந்து துன்புறுத்தப்படுவது குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருவதற்குப் போட்டியாகவும், இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் வங்கதேசத்தில் தொடா்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிவதை மறைக்கும் முயற்சியாகவும் இக் கருத்தை அந்நாடு தெரிவித்திருக்கிறது.

இதுபோன்ற தேவையற்ற கருத்தைகளை வெளியிடுவதைத் தவிா்த்து, சொந்த நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் வங்கதேசம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டில் அரசுக்கு எதிரான மாணவா் அமைப்பினரின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா தனது உயிருக்கு அஞ்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அங்கு, சிறுபான்மையினருக்கு எதிராக குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்தன. பல ஹிந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கிடையே, தங்கள் நாட்டில் தொடரப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளை எதிா்கொள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேசம் வற்புறுத்துகிறது. இதை இந்தியா நிராகரித்துள்ள நிலையில், இரு நாடுகளிடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புகழ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் முக்கிய நகரங்களில் பணியாற்றி வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பிப்ரவரி மாதம்தான், இதுபோன்று 30... மேலும் பார்க்க

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க