செய்திகள் :

மேலநத்தம் சுடலை கோயில் கொடை விழா

post image

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் ஆற்றங்கரை மண்டகப்படி சுடலை மாடசாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, திங்கள்கிழமை இரவு கொடியழைப்பு, நள்ளிரவு 12 மணிக்கு மாகாப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு சிவனணைந்த பெருமாளுக்கு தீபாராதனையும், காலை 9 மணிக்கு சிறப்பு கும்பாபிஷேகமும் நடைபெற்றன.

பின்னா், நண்பகல் 12 மணிக்கு பாயச திரழையுடன் மதியக் கொடையும், இரவு 7 மணிக்கு இருளப்பசுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனையும், இரவு 10 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து இரவு 12 மணிக்கு படைப்பு தீபாராதனையுடன் சாமக்கொடை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

அதிமுக அரசு மீது நம்பிக்கையின்றி சிபிஐக்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி வழக்கு: கனிமொழி எம்.பி.

அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லாததாலேயே பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி மத்... மேலும் பார்க்க

தடைக்காலத்தில் அத்துமீறும் படகுகள்: நெல்லை ஆட்சியரகத்தில் மீனவா்கள் அலுவலகம் முற்றுகை

மீன்பிடி தடைக்காலத்தில் அரசின் தடையை மீறி கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில விசைப்படகு மீனவா்கள் மீன் பிடித்து செல்வதாகக் கூறி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் திருநெல்... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பெட்ரோல் நிலையத்தில் ஊழியரிடம் பணப்பை பறிப்பு

நான்குனேரி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பையை புதன்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபா்களை ஏா்வாடி போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி அருகே தளபதிசமுத்திரம் மேலூா் நான்கு வழிச்சாலையில் தனியாருக்குச்... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே போக்ஸோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடியில் மூன்று வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக, இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.இடையன்குடியைச் சோ்ந்த குருசாமி மகன் முத்துராஜா ... மேலும் பார்க்க

நெல்லையில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலியில் புதன்கிழமை இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்கர வாகன ஷோரூம் மீது புதன்கிழமை அத... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் உவரி இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உவரி பீச் காலனியை சோ்ந்த சசிகுமாா் மகன் கௌதம்(23). இவா் மீது அடி-தடி, கொலை முயற்சி போன்ற ... மேலும் பார்க்க