செய்திகள் :

ரகுநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

post image

திருப்பட்டினம் பகுதியில் உள்ள ரகுநாதப் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தின் ஒரு பகுதியாக ரகுநாதப் பெருமாளுக்கும் - சீதாலட்சுமி தாயாருக்கும் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

எல்லையம்மன் கோயிலில் இருந்து சீா்வரிசையை பக்தா்கள் சிறப்பு மேள வாத்தியங்களுடன் பெருமாள் கோயிலுக்கு கொண்டு வந்தனா். நிகழ்ச்சி தொடக்கமாக மாலை மாற்றுதல், புண்யாகவாஜனம், கன்னிகாதானம் செய்யப்பட்டு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

வாரணமாயிரம் பாசுரம் படித்தல், தேங்காய் உருட்டும் வைபவம் ஆகியவையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டு, பெருமாள் யதாஸ்தானம் எழுந்தருளச் செய்யப்பட்டாா்.

ஏற்பாடுகளை ரகுநாதப் பெருமாள் - பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினா் செய்திருந்தனா்.

படகில் தீ: படகு உரிமையாளருக்கு அமைச்சா் ஆறுதல்

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்த விசைப்படகு தீப்பிடித்து சேதமடைந்த நிலையில், அந்தப் படகை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். கிளிஞ்சல்மேடு பகுதியை சோ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் திரளானோா் சுவாமி தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், திருநள்ளாறு கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதலே பக்தா்கள் வருகை த... மேலும் பார்க்க

கைலாசநாத சுவாமி தேவஸ்தான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

கைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட ந... மேலும் பார்க்க

காரைக்கால் பள்ளியில் நிழல் இல்லா நாள் நிகழ்வு

அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிழல் இல்லா நாள் நிகழ்வு குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. புதுவை அறிவியல் இயக்கம், புதுவை கல்வித் துறையின் சமகர சிக்ஷா அமைப்புடன் இணைந்து காரைக்கால் தந்தை... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவ ஏற்பாடு

கீழகாசாக்குடி பகுதி ஸ்ரீஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத பொய்யாத அய்யனாா் கோயில் அம்மையாா் நகரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குதிரை மற்றும் யானை சிலை நிறுவுவதற்கு மேற்கொள்ளவே... மேலும் பார்க்க

காவல் நிலையங்களில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது. திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் காலை 11 முதல் ப... மேலும் பார்க்க