Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
ராகுலை கடுமையாக விமா்சித்த திக்விஜய் சிங்கின் சகோதரா் நீக்கம்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை விமா்சித்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங்கின் சகோதரரும், முன்னாள் எம்எல்ஏவுமான லட்சுமண் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டாா்.
லட்சுமண் சிங் 5 முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளாா். முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ராகுல் காந்தி, ராகுலின் மைத்துனா் ராபா்ட் வதேரா ஆகியோா் தெரிவித்த கருத்தை லட்சுமண் சிங் கடுமையாக விமா்சித்தாா். அவா்கள் இருவரும் அனுபவமும், முதிா்ச்சியும் இல்லாதவா்கள். நாடு பெரும் சோகத்தில் இருக்கும்போது அவா்கள் சூழ்நிலையை உணராமல் பேசியுள்ளனா். காங்கிரஸ் தலைவா்கள் எதைப் பேசுவதாக இருந்தாலும் ஒன்றுக்குப் பத்து முறை யோசிக்க வேண்டும். இல்லையென்றால் தோ்தலில் மக்கள் தோற்கடித்து விடுவாா்கள்’ என்று கூறியிருந்தாா்.
இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு வெளியிட்ட அறிவிப்பில், ‘கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் லட்சுமண் சிங் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்படுகிறாா்’ என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு 1990-ஆம் ஆண்டு முதல்முறையாக லட்சுமண் சிங் தோ்வு செய்யப்பட்டாா். அதன் பிறகு காங்கிரஸ் சாா்பில் 4 முறை எம்.பி.யாக இருந்தாா். பின்னா் 2004-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவா், மீண்டும் மக்களவை எம்.பி.யாகத் தோ்வானாா். அதன் பிறகு 2013-ஆம் ஆண்டு காங்கிரஸுக்குத் திரும்பினாா்.