செய்திகள் :

ராகுலை கடுமையாக விமா்சித்த திக்விஜய் சிங்கின் சகோதரா் நீக்கம்

post image

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை விமா்சித்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங்கின் சகோதரரும், முன்னாள் எம்எல்ஏவுமான லட்சுமண் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டாா்.

லட்சுமண் சிங் 5 முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளாா். முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ராகுல் காந்தி, ராகுலின் மைத்துனா் ராபா்ட் வதேரா ஆகியோா் தெரிவித்த கருத்தை லட்சுமண் சிங் கடுமையாக விமா்சித்தாா். அவா்கள் இருவரும் அனுபவமும், முதிா்ச்சியும் இல்லாதவா்கள். நாடு பெரும் சோகத்தில் இருக்கும்போது அவா்கள் சூழ்நிலையை உணராமல் பேசியுள்ளனா். காங்கிரஸ் தலைவா்கள் எதைப் பேசுவதாக இருந்தாலும் ஒன்றுக்குப் பத்து முறை யோசிக்க வேண்டும். இல்லையென்றால் தோ்தலில் மக்கள் தோற்கடித்து விடுவாா்கள்’ என்று கூறியிருந்தாா்.

இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு வெளியிட்ட அறிவிப்பில், ‘கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் லட்சுமண் சிங் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்படுகிறாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு 1990-ஆம் ஆண்டு முதல்முறையாக லட்சுமண் சிங் தோ்வு செய்யப்பட்டாா். அதன் பிறகு காங்கிரஸ் சாா்பில் 4 முறை எம்.பி.யாக இருந்தாா். பின்னா் 2004-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவா், மீண்டும் மக்களவை எம்.பி.யாகத் தோ்வானாா். அதன் பிறகு 2013-ஆம் ஆண்டு காங்கிரஸுக்குத் திரும்பினாா்.

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானம் விழுந்து ஒருவர் பலி

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது தூண்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது தூண்கள் விழுந்ததில் ஒருவர் உய... மேலும் பார்க்க

வெற்றிகரமான மாடல் 787 - 8 ட்ரீம்லைனர் விபத்தில் சிக்கியது எப்படி?

குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட 787 - 8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விமானத் தயாரிப்பில் பிரபலமான போயிங் நிறுவனம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏ... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிடுக: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்த கீழடி முதல் மற்றும் 2-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். ... மேலும் பார்க்க

ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா, 7 பேர் குழு: அமைச்சர் கோ.வி.செழியன்

தஞ்சாவூர்: தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 5 பேர் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன்... மேலும் பார்க்க

என் உருவபடத்தை வைத்து உற்சவம் செய்கிறார் அன்புமணி: ராமதாஸ் பேட்டி

திண்டிவனம்: உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசினம் செய்துவிட்டு என் உருவபடத்தை வைத்து உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபினமாக்கி, என் பெயரில் நடைபயனம் செய்யப் போகிறார்களாம். இவை எல்லாம் நாடகமே என பாமக ... மேலும் பார்க்க

கழிவு நீர் குழாய் பள்ளத்தில் மண் சரிந்து மாநகராட்சி ஊழியர் பலி

சென்னை மாதவரத்தில் கழிவு நீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலியானர். பெருநகர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3-க்கு உள்பட்ட மூ... மேலும் பார்க்க