ராஜபாளையத்தில் பலத்த மழை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
ராஜபாளையம் நகா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. இதனால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடிங்கினா். இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு பலத்த மழை பெய்தது. இதே போல, தளவாய்புரம், முகவூா், செட்டியாா்பட்டி ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.