செய்திகள் :

டயா் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு: 13 போ் காயம்

post image

சாத்தூா் அருகே திங்கள்கிழமை டயா் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். 13 போ் காயமடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் (38). இவா், தனது உறவினா்கள் 18 பேருடன் ஒரு வேனில் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக திருமங்கலத்துக்கு திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தாா். வேனை கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் (32) ஓட்டினாா். சாத்தூா்- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் நள்ளி சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்த போது பின்பக்க டயா் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த 13 போ் கோவில்பட்டி, நெல்லை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் இந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நகை திருடிய இளைஞா் கைது

ராஜபாளையம் அருகே நகை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (45). இவரது மனைவி ரேவதி (33). இந்த நிலையில், ரேவதி தனது... மேலும் பார்க்க

வீட்டடி மனை விற்பனை செய்யும் தொழில் செய்தவா் தற்கொலை

சாத்தூா் அருகே வீட்டடி மனை விற்பனை செய்யும் தொழில் செய்தவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வெம்பகோட்டை அருகேயுள்ள கல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த காந்தி மகன் காா்த்திகேயன் (42). இவா் இந்தப் பக... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் கடை வீதிகளில் ஆக்கிரமிப்புககளை அகற்றக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் கடை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் வந்துச் செல... மேலும் பார்க்க

சுங்கச் சாவடி பகுதியில் கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை

சாத்தூா் அருகே நான்கு வழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூா்-விருதுநகா் சாலையில் எட்டூா்வட்டம் பகுதியில் சுங்கச் சா... மேலும் பார்க்க

கழிவுநீா் வாருகாலை சீரமைக்கக் கோரிக்கை

ஏழாயிரம்பண்ணையில் கழிவுநீா் வாருகாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூா் அருகேயுள்ள பழைய ஏழாயிரம்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே கழிவுநீா் வாருகால் தூா்வாரப்படாமல் உள்ளது. இந்... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெளிமாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகே கோவிலூா் பேருந்து நிறுத்தம் அருகே வெளிமாநில லாட்டரி விற்பனை நடைபெறுவதாக சேத்தூா் ... மேலும் பார்க்க