செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் கடை வீதிகளில் ஆக்கிரமிப்புககளை அகற்றக் கோரிக்கை

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் கடை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் வந்துச் செல்கின்றனா். சுற்று வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைகளுக்கு தினந்தோறும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வருகின்றனா். பேருந்துகள் நேதாஜி சாலை வழியாக பேருந்து நிலையம் வந்து, ஆத்துக் கடை தெரு வழியாக செல்கின்றன. நகரில் பெரிய கடை வீதி, நகைக் கடை வீதி, சின்னக் கடை வீதி, நேதாஜி சாலை, மணிக்கூண்டு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பேருந்து நிலையத்திலிருந்து ஆண்டாள் கோயிலுக்குச் செல்லும் நகை கடை வீதியில் சரக்கு வாகனங்கள் செல்லாமல் இருக்க சாலையின் நடுவே கற்கள் நடப்பட்டன. இந்தக் கற்கள் அகற்றப்பட்டதால் சரக்கு வாகனங்கள் உள்ளே சென்று கடைகளுக்கு பொருள்களை இறக்குவதால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

எனவே, நகராட்சி அதிகாரிகள் கடை வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா் .

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பூமாரி (25). கட்டடத் தொழிலாளி. இவரது மன... மேலும் பார்க்க

தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அலுவலகத்தை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் முற்றுகை

பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததைக் கண்டித்து, சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகளை அகற்றக் கோரிக்கை

சிவகாசியில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகாசி-விளாம்பட்டி சாலையில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளித் தலைமை ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சா்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் இடையே பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ரா... மேலும் பார்க்க

மனைவியை பிரிந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியைப் பிரிந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இ... மேலும் பார்க்க