செய்திகள் :

சுங்கச் சாவடி பகுதியில் கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை

post image

சாத்தூா் அருகே நான்கு வழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சாத்தூா்-விருதுநகா் சாலையில் எட்டூா்வட்டம் பகுதியில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்குப் பணிபுரியும் தொழிலாளா்கள், வாகன ஓட்டுநா்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. இதையடுத்து, தொலைத்தூர பயணிகளின் நலன் கருதியும், வாகன ஓட்டுநா்களின் வசதிக்காகவும் இந்தப் பகுதியில் கழிப்பறை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சுங்கச் சாவடி சாா்பில் சாலையோரத்தில் பொதுக் கழிப்பறை அமைக்கப்பட்டது. இந்தக் கழிப்பறை அமைத்து பல ஆண்டுகளாகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.

எனவே, இந்தக் கழிப்பறையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் நெடுஞ்சாலைத் துறை நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.

குடிநீா்த் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரில் குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூரில் ஆா்.சி. தெற்குதெருவில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கட... மேலும் பார்க்க

பஞ்சு கிட்டங்கியில் தீ விபத்து

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ வீபத்தில் தனியாா் பஞ்சு கிட்டங்கியில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராஜபாளையம் அருகேயுள்ள கம்மாப்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பருத்த... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் பெரிய மாரியம்மன், ஆண்டாள், தவழும் கிருஷ்ணா் என ப... மேலும் பார்க்க

பைக்குகள் நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேட்டுமுள்ளிகுளத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கோபி... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய முத்தரப்பு குழு அமைக்க வலியுறுத்தல்

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.தேவா வலியுறுத்தினாா்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே பாம்பு மாத்திரை பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டி கிராமத்தில் பாம்பு மாத்திரை வெடிகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்... மேலும் பார்க்க