செய்திகள் :

ராஜஸ்தானில் இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம்!

post image

ராஜஸ்தானில் இடைநீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகம் முன்பாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திரா காந்தி குறித்து அவதூறாகப் பேசிய அமைச்சர் அவினாஷ் கெலாட்டுக்கு எதிராக, ராஜஸ்தான் சட்டபேரவையில் கடந்த பிப். 21 ஆம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து 6 எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் அறிவித்தார். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது என்று கூறினார். அன்று இரவு முழுவதும் 6 எம்எல்ஏக்களும் பேரவை வளாகத்திலேயே தங்கியுள்ளனர்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று அவர்கள் சட்டப்பேரவை வளாகம் முன்பாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க | புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?

இன்று காலை சட்டப்பேரவை வளாகத்துக்குள் நுழைந்த இடைநீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட்டதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்கள் அவை நடைபெறும் பகுதிக்கு வெளியே இருப்பார்கள் என்று அவைத்தலைவர் பதிவில் இருப்பதாகவும் ஆனால் தற்போது எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும் இந்த உத்தரவு அவைத் தலைவரின் அறிக்கைக்கு எதிரானது ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தெரிவித்தார்.

நாங்கள் நினைத்தால் பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்றும் இடைநீக்கம் செய்யப்படாத எம்எல்ஏக்களும் பேரவை வாயிலில் நிறுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க

119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் ஜாரா நிறுவனத்தின் மாத வாடகை சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தெற்கு மும்பையின் கோட்... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் அம்பானி, அதானி ரூ.50,000 கோடி முதலீடு!

வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்போவதாக தொழிலதிபர்கள் அதானியும் அம்பானியும் தெரிவித்துள்ளனர்.அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் ‘அஸ்ஸாம் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு 2.0 மாநாடு’... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நுபுர் சர்மா!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பாஜகவின் முன்னாள் தலைவர் நுபுர் சர்மா புனித நீராடினார். பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா கடந்த ஜனவரி ... மேலும் பார்க்க

நிதீஷ் குமாரை மீண்டும் வெற்றிபெறச் செய்யுங்கள்: நிஷாந்த் குமார் வேண்டுகோள்!

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது தந்தைக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்இதுதொடர்பாக நிஷாந்த் குமார் கூறுகையில், பிகா... மேலும் பார்க்க

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இது கட்டாயம்! செய்யாவிட்டால்?

நாடு முழுவதும் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும், தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாளங்களை சரிபார்த்து முடித்திருக்க வேண்டும்.ரேஷன் பொருள்கள் வாங்கும் கடைகள... மேலும் பார்க்க