செய்திகள் :

ராஜஸ்தான் பேரவையில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!

post image

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவை விதிமுறைகளை மீறி அமளியில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் வாசுதேவ் தேவ்னானி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க : தில்லி பேரவை: அதிஷி உள்பட 11 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறியதாவது:

துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. கேள்வி நேரத்தின்போது, அமைச்சர் ஒருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவமதித்தார்.

அவரின் பேச்சை திரும்பப் பெற்று அவைக் குறிப்பில் நீக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

ஆனால், எங்களின் பேரவை உறுப்பினர்களை அறிவிப்பின்றி இடைநீக்கம் செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் திகாரம் ஜூலை, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினோம். சட்டப்பேரவைக் கூட்டத்தை சுமுகமாக நடத்த அரசு விரும்பவில்லை” என்றார்.

தொடர்ந்து, இந்திரா காந்தி குறித்த அவதூறு பேச்சை கண்டித்து சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க

119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் ஜாரா நிறுவனத்தின் மாத வாடகை சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தெற்கு மும்பையின் கோட்... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் அம்பானி, அதானி ரூ.50,000 கோடி முதலீடு!

வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்போவதாக தொழிலதிபர்கள் அதானியும் அம்பானியும் தெரிவித்துள்ளனர்.அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் ‘அஸ்ஸாம் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு 2.0 மாநாடு’... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நுபுர் சர்மா!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பாஜகவின் முன்னாள் தலைவர் நுபுர் சர்மா புனித நீராடினார். பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா கடந்த ஜனவரி ... மேலும் பார்க்க

நிதீஷ் குமாரை மீண்டும் வெற்றிபெறச் செய்யுங்கள்: நிஷாந்த் குமார் வேண்டுகோள்!

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது தந்தைக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்இதுதொடர்பாக நிஷாந்த் குமார் கூறுகையில், பிகா... மேலும் பார்க்க

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இது கட்டாயம்! செய்யாவிட்டால்?

நாடு முழுவதும் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும், தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாளங்களை சரிபார்த்து முடித்திருக்க வேண்டும்.ரேஷன் பொருள்கள் வாங்கும் கடைகள... மேலும் பார்க்க