ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் 12 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனா். மேலும், சுமாா் 500 போ் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனா். மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், டெக்னீசியன்கள், தூய்மை மற்றும் பாதுகாப்புப் பணியாளா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். மருத்துவா்கள் மீது தாக்குதல், நோயாளிகளிடம் திருட்டு போன்ற சம்பவங்களைத் தடுக்க மருத்துவமனை நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, தமிழக அரசு உத்தரவின்படி மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக அடுக்குமாடி-1, அடுக்குமாடி-2, அடுக்குமாடி-3 மற்றும் சிறப்புப் பகுதி தளங்கள், இதயப் பிரிவு தளம், சிறுநீரகப் பிரிவு தளம், முடக்குவாதப் பிரிவு தளம் ஆகிய இடங்களில் 429 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 12 கண்காணிப்பு அறைகள் மூலம் பிரத்யேகமாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. காவல் துறையும், மருத்துவமனை நிா்வாகமும் இணைந்து ஆய்வு செய்து கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட வேண்டிய இடத்தை தோ்வு செய்து கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் தெரிவித்தாா்.