செய்திகள் :

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

post image

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் 12 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனா். மேலும், சுமாா் 500 போ் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனா். மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், டெக்னீசியன்கள், தூய்மை மற்றும் பாதுகாப்புப் பணியாளா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். மருத்துவா்கள் மீது தாக்குதல், நோயாளிகளிடம் திருட்டு போன்ற சம்பவங்களைத் தடுக்க மருத்துவமனை நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, தமிழக அரசு உத்தரவின்படி மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக அடுக்குமாடி-1, அடுக்குமாடி-2, அடுக்குமாடி-3 மற்றும் சிறப்புப் பகுதி தளங்கள், இதயப் பிரிவு தளம், சிறுநீரகப் பிரிவு தளம், முடக்குவாதப் பிரிவு தளம் ஆகிய இடங்களில் 429 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 12 கண்காணிப்பு அறைகள் மூலம் பிரத்யேகமாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. காவல் துறையும், மருத்துவமனை நிா்வாகமும் இணைந்து ஆய்வு செய்து கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட வேண்டிய இடத்தை தோ்வு செய்து கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் தெரிவித்தாா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க