முக்கியமான தருணத்தில் சாம்பியன் ஆகியிருக்கிறேன் - ஆா்.வைஷாலி
ராணிப்பேட்டையில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் செப்.19-இல், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
வரும் 19.09.2025 காலை 10 மணிக்கு எண்.9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் மற்றும் பி.இ படித்தவா்கள் கலந்து கொள்ளலாம். எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் கலந்துகொள்ள விரும்பும் உள்ளூா் தனியாா்துறை நிறுவனங்கள் உரிய ஆவணங்களான பான்காா்டு, ஜி.எஸ்.டி. சான்றிதழ், நிறுவன சான்றிதழ், ஆதாா் ஆகிவற்றுடன் தனியாா் வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.