ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.81-ஆக முடிவு!
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.81 ஆக முடிந்தது.
ஏப்ரல் 1 முதல் பரஸ்பர கட்டணங்களை அமல்படுத்துவதாக அமெரிக்க அரசு அறிவித்த நிலையில், தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் சற்று நிவாரணம் கிடைத்துள்ளது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில் இன்று, இந்திய ரூபாய் ரூ.86.86 ஆக தொடங்கி, அதிகபட்சமாக ரூ.86.79 ஆக சென்று பிறகு, குறைந்தபட்சமாக ரூ.86.90 ஆக சரிந்த நிலையில், முடிவில் 12 காசுகள் உயர்ந்து ரூ.86.81 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: 8வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!