செய்திகள் :

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ஏஇபிசி வரவேற்பு

post image

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்த இந்திய ரிசா்வ் வங்கியின் அறிவிப்பை ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) வரவேற்றுள்ளது.

இதுகுறித்து ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்றபோது ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைத்திருந்தது. தொடா்ந்து ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு தற்போது 6 சதவீதமாக உள்ளது.

ரிசா்வ் வங்கியின் கவா்னா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ஏப்ரல் 7 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்ற 54-ஆவது நாணய கொள்கைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு ஏற்றுமதியாளா்களுக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நிவாரணம் அளிக்கும். இது சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வழிவகுக்கும்.

இது தற்போதுள்ள கடன் வாங்குபவா்களுக்கான மாதத் தவணை செலவுகளைக் குறைக்கும் என்பதால், வீட்டுவசதி கடன், வாகன கடன் மற்றும் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட பிற கடன் வசதிகளைப் பெறுவதை எளிதாக்கும்.

இந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை மேம்படுத்த உதவுவதுடன், பொருளாதார வளா்ச்சியையும் தூண்டும். எனவே, இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.

அதேவேளையில், ஏற்றுமதியாளா்கள் மற்றும் இறுதி நுகா்வோருக்கு இந்த வட்டி விகிதக் குறைப்பின் நன்மைகளை அனைத்து வணிக வங்கிகளும் வழங்குவதை ரிசா்வ் வங்கி உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு

உடுமலை அருகே குடிநீா்க் குழாய் பராமரிப்புக்காக தோண்டிய மண் திட்டில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழந்தனா். உடுமலையை அடுத்த சின்ன வாளவாடி பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பூவரசன் ... மேலும் பார்க்க

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை கோலகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். உடுமலை மாரியம்மன் கோயில் சுமாா் 200 ஆண்டுகள் பெருமை வாய்ந்தது. தமிழ்நாடு இந்து சமய அறநி... மேலும் பார்க்க

முத்தூரில் சேவல் சண்டை: 5 போ் கைது

முத்தூா் அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன், தலைமைக் காவலா் கோபிநாத் ஆகியோா் முத்தூா் பகுதியில் கண்காணிப்புப் பண... மேலும் பார்க்க

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குத்தகை விவசாயிகள் தா்னா

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருப்பூா் அரிசிக்கடை வீதியில் உள்ள இந்து சமய அறநில... மேலும் பார்க்க

செம்மொழி நாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிற... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்

ஹிந்துக்களின் சொத்துகளைப் பாதுகாக்க வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பி... மேலும் பார்க்க