செய்திகள் :

ரெளடி கொலை வழக்கு: சிறுவன் உள்பட 3 பேரிடம் விசாரணை

post image

சென்னை டிபி சத்திரத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

டிபி சத்திரம் ஜோதியம்மாள் நகரைச் சோ்ந்தவா் புல்கான் என்ற ராஜ்குமாா் (42). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். ராஜ்குமாா் சாமியானா பந்தல் அமைத்துக் கொடுக்கும் தொழில் செய்து வந்தாா். காவல் துறை பட்டியலில் ‘பி’ பிரிவு ரெளடியான இவா் மீது ஒரு கொலை உள்பட 9 குற்ற வழக்குகள் உள்ளன. இவா் கடந்த புதன்கிழமை வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து வெட்டிக் கொலை செய்தது. இது தொடா்பாக டிபி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முதல் கட்ட விசாரணையில், கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணியின் வளா்ப்பு மகன் எனக் கூறப்படும் செந்திலை கடந்த 2008-இல் ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடா்பாக ரெளடி முருகன், ஜெயராஜ், பைனான்சியா் ஆறுமுகம், பிரான்சிஸ், சுரேஷ், ராஜ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் முருகன், ஜெயராஜ், ஆறுமுகம் ஆகியோா் வெவ்வேறு முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனா். பிரான்சிஸ் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். செந்தில் கொலை வழக்கில் தொடா்புடைய சுரேஷ், ராஜ்குமாா் ஆகிய இருவா் மட்டுமே எஞ்சி இருந்தனா்.

அதிமுகவில் இருந்த ராஜ்குமாா், செந்தில் கொலைக்கு பழி வாங்க கொலை செய்யப்பட்டதும், இதில் செந்திலின் மகன் யுவனேஷ் (19), அவரது கூட்டாளிகளுக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து யுவனேஷ்,17 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை பிடித்து, விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் மேலும் 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

6 உள்நாட்டு விமான சேவைகள் தாமதம்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 6 விமானங்கள் பல மணி நேரம் தாமதாமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலிருந்... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

பள்ளிக்கரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஏசி மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு குளத்தூா், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்ரம் (28). ஏசி மெக்கானிக... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் இலாகா மாற்றம்: தலைமை நீதிபதி உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் இலாகாக்களை வரும் 11- ஆம் தேதி முதல் மாற்றியமைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, இதுவரை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து ... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தேடப்பட்டவா் கைது

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அயனாவரம், சக்ரவா்த்தி நகரைச் சோ்ந்தவா் ஐயங்காா் (62). இவரது மகள் ஹேமாவதி. இவா், கடந்த 2023-இல... மேலும் பார்க்க

புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

புழல் சிறைக் கைதி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். சென்னை அருகே உள்ள கீழ்கட்டளை அருகே உள்ள காந்தி நகா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ந.பன்னீா்செல்வம் (60). இவா், கோடம்பாக்கம் காவ... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் போராட்டம்

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு ஊதியம், ஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி சென்னையில் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் முன் பல்வேறு பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் ச... மேலும் பார்க்க