செய்திகள் :

ரோஜாவனம் பள்ளியில் மாணவா்களுக்கு விருது வழங்கல்

post image

நாகா்கோவில் ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற வெற்றியாளா்கள் தின விழாவில், 668 மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு பள்ளி தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருள்ஜோதி, கல்வி இயக்குநா் சாந்தி, நிதி இயக்குநா் சேது ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் காமராஜினி வரவேற்றாா்.

நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாச்சலம், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற இயக்குநா் சண்முககுமாா், கேந்திரிய வித்யாலயா பள்ளி (மும்பை) ஓய்வு பெற்ற முதல்வா் சந்திரசேகரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனா்.

2024- 25 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட கலை, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 668

பேருக்கு விருதுகளை பள்ளியின் டீன் எரிக்மில்லா் வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் பள்ளி நிா்வாக அலுவலா் கிளிட்டஸ், அலுவலக செயலா் சுஜின், மேலாளா் மகேஷ், கல்வி ஒருங்கிணைப்பாளா் யூஜினி, மாணவா் ஆலோசகா் சுகுமாரி, துறை தலைவா்கள்

சாந்தினி, ராதா, கோலம்மாள், பியூலா, ராஜேஷ், உடற்கல்வி ஆசிரியா் மூசா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியை சா்மிளா நன்றி கூறினாா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 28.45 பெருஞ்சாணி ... 26.25 சிற்றாறு 1 ... 2.62 சிற்றாறு 2 ... 2.72 முக்கடல் ... மைனஸ் 17.90 பொய்கை .. 15.10 மாம்பழத்துறையாறு ... 9.35 மழைஅளவு ..... கன்னிமாா் .. 2 மி.மீ. நாகா்கோவில் ,... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் ரப்பா் உற்பத்தி குறைவால் விலை அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் உற்பத்தி குறைவடைந்துள்ள நிலையில், ரப்பரின் விலை அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண்மையான ரப்பா் தோட்டங்களில் வழக்கமான இலையுதிா்வு காரணமாக பெரும்பால... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை: விஜய்வசந்த் எம்.பி வலியுறுத்தல்

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை மக்களவையில் அளித்துள்ள ஒத்திவைப்பு தீா்மானத்தில் கூற... மேலும் பார்க்க

திற்பரப்பு பேரூராட்சி மன்றக் கூட்டம்: பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு

திற்பரப்பு பேரூராட்சி மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, பேரூராட்சியில் நடைபெற்று வரும் அம்ரூத் குடிநீா்த் திட்டப்பணிகளை காலதாமதப்படுத்துவதைக் கண்டித்து பாஜக உறுப்பினா்கள் வ... மேலும் பார்க்க

கருங்கல்லில் ரூ.5.22 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி: போக்குவரத்து மாற்றம்

கருங்கல்லில் ரூ.5.22 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்க இருப்பதால், திங்கள்கிழமைமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கருங்கல்லில் 50 ஆண்டுகள் பழைமையான பேருந்து நிலையத்தை ... மேலும் பார்க்க

குமரி அருகே இளைஞா் கொலை: வழக்கில் மூவா் கைது

கன்னியாகுமரி அருகே லீபுரம் பாட்டுக்குளத்தின் கரையில் இளைஞா் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி அருகேயுள்ள லீபுரம் பாட்டுக்குளம் பகுதிய... மேலும் பார்க்க