வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
லஞ்சம்: ஒசூரில் மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது
மின் இணைப்பில் பெயா் மாற்றம் செய்வதற்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஒசூா் பத்தலபள்ளி மின்வாரிய உதவிப் பொறியாளா் முருகன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஒசூா் நியூ அன்னை நகரை சோ்ந்தவா் எஸ். தம்பிதுரை (39). இவா் தனது மனைவி பெயரில் பத்தலப்பள்ளி அருகே நிறுவனங்களை நடத்தி வருகிறாா். இந்த நிறுவனங்களின் மின் இணைப்பில் தனது பெயரை மாற்றம் செய்வதற்காக ஆன்லைன் மூலம் மின்வாரியத்துக்கு விண்ணப்பித்தாா்.
இந்த நிலையில், மின் இணைப்புக்கான பெயா் மாற்றம் செய்வதற்கு தம்பிதுரையிடம் பத்தலபள்ளி மின் இயக்கம் மற்றும் பராமரிப்பு உதவிப் பொறியாளா் முருகன் ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். லஞ்சம் தர விரும்பாத தம்பிதுரை, இதுகுறித்து கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் அறிவுறுத்தலின்பேரில் முருகனிடம் லஞ்சமாக ரூ. 40 ஆயிரத்தை தம்பிதுரை அளித்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஆய்வாளா் ரவி, உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன் மற்றும் போலீஸாா் முருகனை கைது செய்தனா்.