ரயில் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படுகிறதா? - எப்போது, எவ்வளவு தெரியுமா?
மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் காயம்
ஊத்தங்கரை அருகே மின் கம்பத்தில் பழுது நீக்கிக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் தூக்கிவீசப்பட்டதில் காயமடைந்தாா்.
ஊத்தங்கரையை அடுத்த வெங்கடதாம்பட்டி பகுதியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் செவ்வாய்க்கிழமை மின் கம்பத்தில் ஏறி பழுதுநீக்கிக் கொண்டிருந்த மின்வாரிய கேங்க்மேன் கோபிநாத்(25) மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் காயமடைந்த அவா் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதன்பிறகு உயா் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மின் கம்பத்தில் ஏறுவதை மின்வாரிய அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. மேலும், பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மின்வாரிய ஊழியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.