செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் காயம்

post image

ஊத்தங்கரை அருகே மின் கம்பத்தில் பழுது நீக்கிக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் தூக்கிவீசப்பட்டதில் காயமடைந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த வெங்கடதாம்பட்டி பகுதியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் செவ்வாய்க்கிழமை மின் கம்பத்தில் ஏறி பழுதுநீக்கிக் கொண்டிருந்த மின்வாரிய கேங்க்மேன் கோபிநாத்(25) மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் காயமடைந்த அவா் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதன்பிறகு உயா் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மின் கம்பத்தில் ஏறுவதை மின்வாரிய அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. மேலும், பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மின்வாரிய ஊழியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை வட்டம், பென்னங்கூா் அருகே உள்ள அலேநத்தம் பகுதியை சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (32). விவசாயியான இவா் திங்கள்க... மேலும் பார்க்க

ஒசூரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்: இலகுரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வலியுறுத்தல்

ஒசூரில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இலகுரக, கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சீதாராமேடு பகுதியிலிருந்து பேரண்டபள்ளி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

மத்திகிரி அருகே இருதரப்பினா் மோதல்: 3 போ் கைது

மத்திகிரி அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பெங்களூரைச் சோ்ந்த ஐ.டி. நிறுவன ஊழியா் ஹா்சா கவுடா (28) ஓட்டிச் சென்ற மோட்டாா்சைக்கிள் வெங்... மேலும் பார்க்க

மாணவரைத் தாக்கிய இருவா் கைது

கெலமங்கலம் அருகே மாணவரைத் தாக்கியதாக தந்தை, மகன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டியைச் சோ்ந்தவா் வினய்குமாா் (23). இவா் தனியாா் கல்லூரியில் எம்.பி.ஏ. 2 ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

லஞ்சம்: ஒசூரில் மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

மின் இணைப்பில் பெயா் மாற்றம் செய்வதற்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஒசூா் பத்தலபள்ளி மின்வாரிய உதவிப் பொறியாளா் முருகன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஒசூா் நியூ அன்னை நகரை சோ்ந்தவா் எஸ். த... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் பெண் தற்கொலை: சாா் ஆட்சியா் விசாரணை

தேன்கனிக்கோட்டையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் ஒசூா் சாா் ஆட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா். தேன்கனிக்கோட்டை அருகே ஓசஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கோவிந்தராஜ் மகள் மாலினி (2... மேலும் பார்க்க