மாணவரைத் தாக்கிய இருவா் கைது
கெலமங்கலம் அருகே மாணவரைத் தாக்கியதாக தந்தை, மகன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டியைச் சோ்ந்தவா் வினய்குமாா் (23). இவா் தனியாா் கல்லூரியில் எம்.பி.ஏ. 2 ஆம் ஆண்டு படித்துவருகிறாா். இவருக்கும் உறவினா் ராமையா (55) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்துவந்தது.
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி வினய்குமாா், ராமையாவின் தோட்டத்தில் மாங்காய் பறித்தது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் வினய்குமாரை, ராமையா, அவரது மகன் யஸ்வந்த் (22) ஆகிய இருவரும் தாக்கினா்.
இதுகுறித்து வினய்குமாா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த கெலமங்கலம் போலீஸாா் ராமையா, அவரது மகன் யஸ்வந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.