செய்திகள் :

வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்பு: காஞ்சிபுரத்தில் தவெக ஆர்ப்பாட்டம்!

post image

காஞ்சிபுரம்: முஸ்லீம்களுக்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் சமூக-மத ரீதியிலான பணிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு திருத்தங்களுடன் மீண்டும் இரு அவைகளிலும் தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

திருவள்ளூரில் தவெக ஆர்ப்பாட்டம்!

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை மாவட்ட தலைநகரங்களில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் மாவட்ட தலைவர் எஸ். கே. பி. தென்னரசு தலைமையில் முஸ்லீம்களுக்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும், அதனை திரும்ப பெறக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட தவெகவினர் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், இதனை திரும்பப் பெறும் வரை தவெக போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

பாஜக பின்பற்றுவது இந்து மதமல்ல: ராகுல் கண்டனம்!

ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரின் வருகைக்கு பின்பு ராமர் கோயிலில் கங்கை நீர் ஊற்றி கழுவப்பட்ட விவகாரத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்ச... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: 15 புதிய சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று!

உத்தரகண்ட் மாநிலத்தின் சிறையில் 15 புதிய சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது.ஹரிதுவார் மாவட்ட சிறையில் அடைக்கப்பட அழைத்து வரப்பட்ட புதிய சிறைக் கைதிகளுக்கு கடந்த ஏப்.7 அன்று மருத்த... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாக்கிய மொழியில் உபநிஷதுகள் பரிசளிப்பு!

ஸ்லோவாக்கியா சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாக்கிய மொழிப்பெயர்ப்பில் உபநிஷதுகளை அந்நாட்டு அதிபர் பரிசளித்துள்ளார்.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு போர்ச்சுகல், ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்... மேலும் பார்க்க

18 அமெரிக்க டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக யேமனின் ஹவுதி படை அறிவிப்பு!

கடந்த 2023-ம் ஆண்டு முதல் 18 அமெரிக்க அதிநவீன டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் அறிவித்துள்ளனர். யேமன் நாட்டின் அல்-ஜாவ்ஃப் மாகாணத்தின் மீது கடந்த ஏப்.3 அன்று பறந்த... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: பள்ளிக்கூடத்தில் மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.கோடெர்மா மாவட்டத்தின் லால்காபானி கிராமத்திலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இன்று (ஏப்.9) மதியம் வகுப்பு ... மேலும் பார்க்க

காஸாவில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 23 பேர் பலி!

காஸா நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டதாக அந்நகரத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காஸாவின் ஷிஜாயா பகுதியிலுள்ள 4... மேலும் பார்க்க