செய்திகள் :

வங்க மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார் மமதா: ஹிமந்தா!

post image

வங்காள மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கவலைப்படுகிறார் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

முஸ்லிம்-வங்காளிகளுக்காக அவர் அஸ்ஸாமுக்கு வந்தால், அஸ்ஸாமிய மக்களும் இந்து-வங்காளிகளும் அவரை விட்டுவைக்க மாட்டார்கள் என்று எச்சரித்தார்.

மமதா பானர்ஜி வங்கதேசத்தினரை விரும்புகிறாரா அல்லது முஸ்லிம்-வங்காளிகளை மட்டும் விரும்புகிறாரா? முஸ்லிம்-வங்காளிகள் மட்டும் விரும்புகிறார் என்பதே எனது பதில். அரசியல் இலக்குகளை அடைய பாஜக மொழியியல் அடையாளத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் சமீபத்திய குற்றச்சாட்டு குறித்து சர்மா விமர்சித்துள்ளார்.

வங்க மொழி பேசும் மக்களின் பாதுகாப்பில் பானர்ஜி ஆர்வமாக உள்ளாரா? அவர் ஏன் தனது மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் செயல்படுத்தவில்லை?

டிசம்பர் 31, 2014-க்கு முன்னர் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆவணமற்ற முறையில் இந்தியாவிற்கு வந்த முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த சட்டம் 2019 வழி வகுக்கிறது.

வங்காள மொழி பேசும் இந்துக்கள் அஸ்ஸாமிய சமூகத்தில் ஒன்றிணைந்துவிட்டதாகவும், அவர்களின் மொழி, கலாசாரம், மதம் மற்றும் அனைத்து அம்சங்களும் இங்குப் பாதுகாக்கப்படுவதாகவும் சர்மா கூறினார்.

அஸ்ஸாமில் வங்காள இந்துக்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்கள் அஸ்ஸாமிய நிலப்பரப்பில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர் என்பதை மமதா உணர வேண்டும்.

வங்காள-இந்துக்கள் தங்கள் மொழியில் பேசுகிறார்கள், தங்கள் மதத்தை அவர்களின் கலாசாரத்தின் அனைத்து அம்சங்களையும் இங்கே பின்பற்றுகிறார்கள் என்று அவர் கூறினார், மேலும் வங்க மாநிலத்தில் இணை அதிகாரப்பூர்வ மொழி மற்றும் பராக் பள்ளத்தாக்கில் அதிகாரப்பூர்வ மொழி. இங்கு வங்காளிகளுக்கும் அஸ்ஸாமியர்களுக்கும் இடையில் எந்தப் பிரிவும் இல்லை என்று அவர் கூறினார்.

மத்திய அரசும் பாஜக ஆளும் மாநிலங்களும் வங்காள மொழி பேசும் புலம்பெயர்ந்தோரைச் சட்டவிரோத வங்காளதேசிகள் அல்லது ரோஹிங்கியாக்கள் என்று முத்திரை குத்தி திட்டமிட்டுக் குறிவைப்பதாக மமதா பானர்ஜி குற்றம் சாட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

Assam Chief Minister Himanta Biswa Sarma has alleged that his West Bengal counterpart Mamata Banerjee is only concerned about Bengali-speaking Muslims.

கூகுள் தேடலில் செய்யறிவு(ஏஐ)! - பயன்படுத்துவது எப்படி?

பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் செய்யறிவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் ஒரு பகுதியாக தற்போது அனைத்துத் துறைகளிலும் ஏ.ஐ. எனும்... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: ஐஐடி-காரக்பூர் விடுதியில் இருந்து மாணவரின் சடலம் மீட்பு

மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி-காரக்பூர் விடுதியில் இருந்து மாணவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மாணவரின் பெயர் ரிதம் மொண்டல் (21). அவர் நான்காம் ஆண்டு பொறியியல் மாணவர். அ... மேலும் பார்க்க

தில்லியில் ஒரே நாளில் 45 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பில் தலைநகரம்!

தில்லியில் ஒரே நாளில் சுமார் 45 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளுக்கு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். தில்லியில் கடந்த சில நாள்களாக கல்வி நிலையங்கள் மி... மேலும் பார்க்க

பிகாரில் மின்னல் பாய்ந்து 33 பேர் பலி !

பிகாரில் இந்த வாரத்தில் மின்னல் பாய்ந்ததில் 33 பேர் பலியாகினர். பிகார் மாநிலத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களகாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின்போது ஏற்படும் மின்னால் மக்கள் மிகுந... மேலும் பார்க்க

வந்தே பாரத்! ரயில் நிலையம் வர 15 நிமிடம் முன்புகூட டிக்கெட் முன்பதிவு வசதி!

இனி, வந்தே பாரத் ரயில், ஒரு ரயில் நிலையத்தை அடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புகூட, அந்த ரயிலுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ரயில் காலை 9 மணிக்கு திருச்சி... மேலும் பார்க்க

கட்டுக்கட்டாக பணம்! பதவி நீக்கத்துக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் மனு

புது தில்லி: வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானம், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் நி... மேலும் பார்க்க