செய்திகள் :

ரஜினிகாந்த்: ``நடித்தது மட்டுமல்ல, நீங்கள் பாஷாவாகவே மாறினீர்கள்'' - சுரேஷ் கிருஷ்ணா நெகிழ்ச்சி!

post image

ரஜினிகாந்த் நடிப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும்வெற்றி பெற்ற திரைப்படம் பாஷா.

இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகவிருப்பதை முன்னிட்டு, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக எக்ஸ்தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த் சார் பாஷாவாக நடிக்கவில்லை, பாஷாவாக மாறினார் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

சுரேஷ் கிருஷ்ணா பதிவில், "ஒரு புகழ்பெற்ற படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாட வேண்டிய நேரம் இது.

சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி

"அன்பான பார்வையாளர்களே, ‘பாட்ஷா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு நன்றி. முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது 4கே டால்பி அட்மாஸில் மாற்றப்பட்டு வெளியாகி இருக்கிறது. பெரிய திரையில் மாயாஜாலத்தை தவறவிடாதீர்கள்." எனக் கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில் ரஜினிகாந்த் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்து, "அன்புள்ள ரஜினி சார். ‘பாட்ஷா’வுக்கு காரணம் நீங்கள் தான். உங்கள் அற்புதமான நடிப்பு, உங்களது திரை ஆளுமை. நீங்கள் பாட்ஷாவாக நடித்தது மட்டுமல்ல, பாட்ஷாவாகவே மாறினீர்கள். இப்போதும் திரையுலக வரலாற்றில் படத்தின் பெயர் பொறிக்கப்பட்டதற்கு காரணம் நீங்கள் தான்." எனக் கூறியுள்ளார்.

பாஷா
பாஷா

மீண்டும் ஒரு பதிவில், "புகழ்பெற்ற பாட்ஷா குழுவான ஆர்.எம்.வி சார், ரஜினி சார், நக்மா, ரகுவரன், தேவா, வைரமுத்து, பி.எஸ்.பிரகாஷ், மேகி, கணேஷ் – குமார், பாலகுமாரன், ராஜு மாஸ்டர் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு நன்றி. ஒரே ஒரு பாட்ஷா மட்டுமே. அது நமது ‘பாட்ஷா’ மட்டுமே!" எனப் பெருமிதம் கொண்டுள்ளார்.

பாஷா தமிழ் சினிமாவில் மாஸ் திரைப்படத்துக்கான நடையை உருவாக்கிய திரைப்படங்களுள் ஒன்று. இன்றும் இந்த இதன் உலகப் புகழ்பெற்ற வசனங்கள் பரவலாக புழக்கத்தில் உள்ளன.

பாஷாவின் மறு வெளியீடு ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது!

What To Watch On Theatre: பன் பட்டர் ஜாம், டிரெண்டிங், - இந்த வாரம் வெளியாகியுள்ள படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படங்களின் லிஸ்ட்!பன் பட்டர் ஜாம் (தமிழ்) :பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன், ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'பன் பட்டர் ஜாம்' இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியா... மேலும் பார்க்க

`அதிசய மனிதன், புரட்சிக்காரன்..’ - இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!

'இவர்கள் வித்தியாசமானவர்கள்' (1980) என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் நுழைந்தவர் வேலு பிரபாகரன். தன் திறன்களை வளர்த்துக்கொண்டு நாளைய மனிதன், அதிசய மனிதன், அசுரன் , ராஜாளி, கடவுள், சிவன... மேலும் பார்க்க

Mrs & Mr: ``நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்" - நடிகை வனிதா விஜயகுமார் சவால்!

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்து, நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகி நடித்திருக்கும் படம் 'Mrs and Mr'. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அங்கு அவர் வாங்கிய சம்பளத்தை வைத்து... மேலும் பார்க்க