முத்தரப்பு டி20 தொடர்: நியூசி.க்கு 121 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!
முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்துள்ளது.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றையப் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.
121 ரன்கள் இலக்கு
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் வெஸ்லி மத்விர் 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரையன் பென்னட் 21 ரன்களும், டோனி முனியோங்கா 13 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆடம் மில்னே, மிட்செல் சாண்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.
Zimbabwe, playing first against New Zealand in the tri-nation T20 series, scored 120 runs for the loss of 7 wickets.